Saturday, December 24, 2011

குலவெறியைத் தூண்டும் குருபூசை


தீண்டாமை அண்டாமை தினவெடுத்துத் திரிந்த
நாட்டில் குலக் கொடுமைக் கெதிராய்
மண்டும் அறியாமை மாய்த்து மானுடம் தழைக்கப் பாடுக ளாற்றிய
தொண்டில் தோய்ந்த தூயநல் தலைவர்க்குப்
பிறந்தநாள் நினைவுநாள் எடுக்கின்றோம்
தொண்டறம் தொடர அவர்தம் தொண்டினை
நினைவு கூர்கிறோம் நன்றியுடன்!

தந்தை பெரியார் தமிழ்க்கடல் மறைமலையார்
அயோத்திதாச பண்டிதர் திரு.வி.க.
சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர்
ஈகப்பெருந் தலைவர் வ.உ.சி.
பொதுவாழ்வில் புடம்போட்ட புகழ்பெரும் சீயங்கள்
தன்னலங் கருதாத் தங்கங்கள்
பொதுமை நோக்கும் புதுமைப் போக்கும்
கொண்ட தன்மானத் தலைவர்கள்!

தமிழ்ப்பண் பாட்டிற் கெதிராய் தேசியம்
தெய்விக மதஞ்சார் புலம்பல்
தமிழனைத் தாழ்த்தி தலைகுனிய வைக்கும்
ஆதிக்கக் குலத்தாரின் அத்துமீறல்
ஆரியத்தின் அடிவருடி அடியாள் வேலையில்
பார்ப்பனியப் பாது காவலராய்
குருபூசை என்னும் பேரால் தமிழகத்தில்
குலவெறியைத் தூண்டும் கொடுமை!

வீர மரபினில் உதித்ததாய் வீரார்ப்புப்
பேசிடும் இவர்கள் பள்ளுப்
பறையிடம் காட்டுவர் வீரத்தை பார்ப்பனிய
மேலாண்மைக்குப் பணிந்து நிற்பர்
புராண இதிகாசப் புனைவுகளாம் தேவர்
தேவேந்திரர் என்பதில் இழிவே
சரியான புரிதலின்றி சகுனிகள் வகுத்த
சனாதனத்தைக் கட்டி யழுவதா?

பரமக் குடியில் பதைக்கப் பதைக்க
பட்டப் பகல் பச்சைப் படுகொலை
அரசின் ஒருசார்பு நிலையால் கலவரம்
காவல் துறையினரின் வெறியாட்டம்
ஆதிக்கக் குலத்தாரை அனுசரித்தே அன்றும்
இன்றும் அரசியல் கட்சிகள்
பாதிக்கப் பட்டோர் வழக்கம் போல் ஊருக்கு
இளைத்தவர் தாழ்த்தப் பட்டோரே!
- இனியன், திருச்சி 13.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...