Thursday, December 29, 2011

கடவுளுக்கு சக்தி இருந்தால் பகவான் எப்படி கடத்தப்பட்டிருப்பார்?

நித்யானந்தா ஆசிரம கோவிலில் சாமி நகைகள் கடத்தல் 


பெங்களூரு, டிச.29- பெங்களூரு அருகே உள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் காம்ப வுண்டு சுவரை உடைத்து விட்டு உள்ளே புகுந்த சில நபர்கள் கோவிலில் இருந்த சாமி நகைகளை திருடிச்சென்று விட் டார்கள்.

பெங்களூரு அருகே ராமநகர் மாவட்டம் பிடதி காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. அதற்கு உள்ளே ஆனந்தீஸ்வரா கோவில் இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு ஆசிரமத்திற்கு வந்த சில நபர்கள், காம்பவுண்டு சுவரை உடைத்து விட்டு உள்ளே புகுந்தனர்.

பின்னர் ஆனந்தீஸ்ர வரா கோவிலுக்குள் புகுந்து சாமி கழுத்தில் கிடந்த தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், உண்டியல் பணத்தை அவர்கள் திருடிச் சென்று விட்டார்கள். நேற்று அதிகாலையில் கோவில் கதவு திறந்து கிடந்ததையும் நகைகள், பொருள்கள் கொள்ளை போனதையும் பார்த்து ஆசிரம பக்தர்கள், காவ லாளிகள் அதிர்ச்சி அடைந்தனராம்.

இதுபற்றி உடனடி யாக காவல்துறையின ருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் பிடதி காவல்துறையினர் விரைந்து வந்து விசா ரணை நடத்தினார்கள். கோவிலுக்குள் பதிந்து இருந்த சில நபர்களின் கைரேகைகளை நிபு ணர்கள் பதிவு செய்து கொண்டனர். கோவிலில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள் கள் கொள்ளை போய் இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

இதற்கிடையே, ஆசிரமத்தின் அருகே ஒரு இடத்தில் வெள்ளி யிலான பூஜை பொருள் கள் கிடந்தது. அந்த பொருள்கள் நித்யா னந்தா சாமியார் ஆசிரம கோவிலில் திருடியவை என்று தெரியவந்தது. அவற்றை என்ன கார ணத்திற்காக  அந்த நபர் கள் வீசிச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.

நித்யானந்த சாமி யாரின் ஆசிரம கோவி லில் இருந்து சாமி கழுத் தில் கிடந்த தங்க மாங் கல்யம் உண்டியலில் இருந்த பணம் உள்பட ரூ.இரண்டரை லட்சம் மதிப்பிலான பொருள் கள் மட்டுமே கொள்ளை போய் இருப்பதாக பிடதி காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...