Thursday, November 24, 2011

இந்து சாமியாரின் கதை அமெரிக்காவிலும் சிரிக்கிறது

நியூயார்க், நவ. 24-   ஒவ்வொருவரிடம் இருந்தும்  முப்பதாயிரம் டாலர் பெற்றுக் கொண்டு பொய்க் காரணம் கூறி அமெரிக்காவிற்கு வருவ தற்கான விசாவைப் பெற்று, வழங்கி மோசடி செய்துள்ளார் என்று இந்திய ஆன்மீக குரு ஒருவர் மீது சாற்றப்பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள் ளதாக அமெரிக்க நீதி மன்றம் தீர்ப்பளித்துள் ளது.  

அமெரிக்காவின் மில் வாகியில் உள்ள கவுடியா வைஷ்ணவ சொசைட்டி என்னும் ஓர் இந்துக் கோயிலின் தலைவர் என்று தன்னைக் கூறிக் கொண்ட 31 வயதான சாகர்சென் ஹல்தார் என் பவர்தான் இந்தக் குற்ற வாளி.

மத சம்பந்தமான பூசாரி போன்ற பணிகளைச் செய்வதற்காக அமெரிக்கா வருவதாகக் கூறிக் கொண்டு 25-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறு வதற்கான விசாக்களைப் பெற்று இவர் வழங்கி  மோசடி செய்துள்ளார் என்ற இவர் மீதான குற் றத்தை கிழக்கு வின்கான் சின் மாவட்ட நீதிமன்ற ஜூரி உறுதி செய்துள்ளார். இவருக்கான தண்டனை 24 ஆம் தேதியன்று வழங் கப்படும்.

இந்த விசாக்களுக் கான விண்ணப்பங்களில் அவர்கள் கவுடிய வைஷ் ணவ  சொசைட்டி கோயி லில் பணியாற்ற வரும் மதப் பணியாளர்கள்  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அவர்கள் எந்தவிதமான மதப் பயிற் சியோ, அனுபவமோ பெற்றி ருக்கவில்லை. அமெரிக் காவுக்கு வந்த பிறகு பூசாரி களாக வேலை செய்யும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை.

இந்த விசாவைப் பெற்று வழங்குவதற்கு ஒவ் வொருவரிடமிருந்தும் தலா முப்பதாயிரம் டாலர்களை ஹல்தார் பெற்றுள்ளார். ஒரு கணிசமான தொகையை முன் பண மாகக் கொடுக்கும் இவர் கள் அமெரிக்கா வந்த பிறகு மில்வாகி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகளில் வேலை செய்து தாங்கள் தர வேண் டிய பாக்கிப் பணத்தைத் தங்கள் வசதி போல ஹல்தா ருக்கும் இந்தியாவிலுள்ள அவருடன் தொடர்புடை யவர்களுக்கும் அளித்து விடுகின்றனர்.

இந்த வழக்கில் ஹல் தார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக் கிறது என்று அமெரிக்க சுங்கம் மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடு, மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்பு விசா ரணை அதிகாரி, கேரி ஹார்ட்விக் என்பவர் கூறி னார்.  குற்றம் புரியும் நோக் கம் கொண்டவர்களும், நமக்குத் தீங்கிழைக்கும் எண்ணம் கொண்டவர் களும் தவறாகப் பயன் படுத்திக் கொள்ளும் ஆபத்தை  இத்தகைய விசா மோசடிகள் ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

இந்த வைஷ்ணவ கோயில் அதிக அளவில் விசா விண்ணப்பங்களை அளித்துள்ளதாக, அமெ ரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற மோசடிப் பிரிவில் இருந்து 2008 ஜூலையில் பெறப்பட்ட ஒரு புகார் மீது விசாரணை தொடங் கியது.

இவ்வாறு விரிவான விசா மோசடியைச் செய்வ தற்கு ஹல்தார் இந்தக் கோயிலின் பெயரைப் பயன்படுத்திக் கொண் டுள்ளார் என்று விசா ரணையில் தெரியவந்தது.

இந்தியாவில் இருந்து 2010 ஜூனில் அவர் அமெரிக்காவுக்கு வந்த போது, சிகாகோ பன் னாட்டு விமானதளத்தில் அவர் கைது செய்யப்பட் டார்.

அவரது பெட்டியில், பல இந்தியக் குடிமக் களின்  அடையாள ஆவ ணங்கள், அவர்களது பாஸ்போர்ட்டுகள்,  ஒளிப் படங்கள் மற்றும் இதர ஆவணங்கள் கண்டெடுக் கப்பட்டன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...