Wednesday, November 30, 2011

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா


சோலை எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் நூல் - ஆசிரியர் குரலில் வாழ்வியல் சிந்தனை குறுந்தகடு வெளியீடு
நீதியரசர் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் - பேரா.சுப.வீரபாண்டியன் பங்கேற்கின்றனர்
தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் சிறப்புரையாற்றுகிறார்
சென்னை, நவ. 30- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொள்கை முரசம் கொட் டும் விழாவாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், நீதியரசர் பி.ஆர்.கோகுல கிருஷ்ணன், பேராசிரியர் சுப.வீர பாண்டியன் பங்கேற்கின்றனர்.
எழுபது ஆண்டுகள் பொதுத் தொண்டிற்கு சொந்தக்காரர், திரா விடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் எழுச்சித் திருவிழா வாக, கொள்கைத் திருவிழாவாக நடைபெறுகிறது.
2.12.2011 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழா தொடங்குகிறது.
கோ.சாமிதுரை
இவ்விழாவிற்கு திராவிடர் கழக பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமி துரை தலைமை வகித்து உரையாற்று கிறார்.
சென்னை மண்டல தி.க. தலைவர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் நெய்வேலி வெ.ஞானசேகரன், வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர் இரா.வில்வ நாதன், தாம்பரம் மாவட்ட தி.க. தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்ட தி.க. தலைவர் மா.ஆ.கந்த சாமி, கும்மிடிப்பூண்டி மாவட்ட தி.க. தலைவர் செ.உதயகுமார் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகிக்கிறார்கள்.
திராவிடர் கழக பிரச்சார செயலா ளர் வழக்குரை ஞர் அ.அருள்மொழி அறிமுக உரையாற்றுகிறார்.
திராவிடர் கழக பொதுச் செயலா ளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவ ரையும் வரவேற்று உரையாற்றுகிறார்.
வீரமணி - ஒரு விமர்சனம் நூல் வெளியீடு

மூத்த எழுத்தாளர் சோலை அவர்கள் எழுதிய வீரமணி - ஒரு விமர்சனம் நூலை வெளியிட்டு தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சிறப்புரை ஆற்றுகிறார்.

நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் ஒலிப் புத்தகம் (ஆசிரியர் குரலில்) குறுந் தகட்டை வெளியிட்டு குஜராத் மாநில உயர்நிதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நூலைத் திறனாய்வு செய்து உரையாற்றுகிறார்.

நிகழ்ச்சியில் வீரமணி - ஒரு விமர்சனம்! நூலை எழுதிய மூத்த எழுத்தாளர் சோலை பாராட்டப்பட இருக்கிறார்.
நூல் பெறுவோர்

விழாவில், நீதிபதி இரா.பரஞ்சோதி, பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், மயிலை நா.கிருஷ்ணன், வழக்கறிஞர் த.வீரசேகரன், மு.அ.கிரிதரன், க.திரு மகள், த.க.நடராஜன், கு.தங்கமணி, ஆவடி பா.தென்னரசு, சைதை எம்.பி. பாலு, மு.சென்னியப்பன், மு.கதிரவன் (தி.மு.க) ஆகியோர் நூலைப் பெறுகின்றனர்.

ஒலிப்புத்தக குறுந்தகடு பெறுவோர்
ஒலிப்புத்தக குறுந்தகட்டை கோ.ஒளிவண் ணன், பேராசிரி யர் மு.நீ.சிவரா சன், வீ.குமரே சன், வழக்கறி ஞர் வீரமர்த் தினி, கோ.கருணாநிதி, அர.இராமச் சந்திரன், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், செ.ரா.பார்த்தசாரதி, செம்பியம் கி.இராமலிங்கம், இரா.தமிழ்ச்செல் வன், செ.தமிழ்சாக்ரடீஸ் ஆகியோர் பெறுகின்றனர்.
மேலும் 3 புதிய நூல்கள்

தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசையில் மேலும் 3 புதிய நூல்கள் வெளியிடப்படுகின்றன.

1. உண்மை தொழிலாளர் யார்?

2. மேல்நாடும் கீழ்நாடும்

3. பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?

டெய்சி மணியம்மை நிகழ்ச்சிகளைத் தொகுத்து இணைப்புரை வழங்குகிறார். நிறைவாக வை.கலையரசன் நன்றியுரை ஆற்றுகிறார்.

முன்னதாக மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை கழகக் குடும்பத்துப் பிள்ளை களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப் பாக நடைபெறவிருக்கின்றன. இவ்விழா வில் பங்கேற்க குடும்பம் குடும்பமாக திராவிடர் கழக தோழர்களும் இன உணர்வாளர்களும் திரளுகிறார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...