Sunday, October 16, 2011

பா.ஜ.க.வின் பாஷ்ய கர்த்தா


பா.ஜ.க.வின் பாஷ்ய கர்த்தா ஒருவர் இருக்கிறார். அவர்தான் துக்ளக் ஆசிரியர் சோ ராம சாமி அய்யர்வாள்; இவ்வார துக்ளக் கில் (19.10.2011) கேள்வி ஒன்றுக்கு இப்படி பதில் சொல் லியிருக்கிறார்.
கேள்வி: தேசியக் கட்சி என்று அழைக் கப்படும் பா.ஜ.க.வின் மனதில் ஹிந்துக் கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்.. என்ற பாகுபாடு இல்லை என்று தங் களால் உறுதியாகக் கூற முடியுமா?
பதில்: காங்கி ரஸைப் போல மைனா ரிட்டி மக்களுக்குப் பல சலுகைகளை அளித் தாக வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கவில்லை. மைனாரிட்டி, மெஜாரிட்டி என்ற பாகுபாடு இல் லாமல், மக்களைச் சம மாகப் பாவித்து, எல்லாத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. இதுதான் உண்மையான மதச்சார் பின்மை. ஆனால், மைனா ரிட்டிகளுக்குச் சலுகை கள் அளிப்பதுதான் உண் மையான மதச்சார் பின்மை என்ற செக்யூலர் இலக்கணம் இன்று தோன்றியிருக்கிறது. அதை பா.ஜ.க., ஏற்க வில்லை என்று நீங்கள் சொன்னால், அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த செக்யூலர் இலக் கணத்தில்தான் மெஜா ரிட்டி, மைனாரிட்டி பாகு பாடு வருகிறது. பா.ஜ.க. வின் பார்வையிலோ, எல்லா மக்களையும் சம மாக நடத்த வேண்டும் என்ற நோக்கம்தான் இருக்கிறது; அதில் நீங் கள் கூறுகிற பாகுபாடு இல்லை.
இதுதான் திருவாளர் சோவின் பதில்.
இதன் நிலை என்ன? ஏற்றத் தாழ்வு மிக்க ஒரு சமூக அமைப்பில் எப்படி எல்லோரையும் சமமாக பார்க்க முடியும்?
ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் கூட்டத் தையும், வாய்ப்பு மறுக்கப் பட்ட மக்களையும் சம மாகப் பார்ப்பார்களாம்; இதுதான் உண்மையான மதச் சார்பின்மையாம்.
அதாவது வயிறு முட்டத்தின்று வயிற்றில் சந் தனம் பூசிக் கொண்டு இருப்பவனையும், பட்டி னிக்காரனையும் சமப் பார்வையில் பார்ப்பது தான் சரியானதாம்.
முஸ்லீம்களும், கிறித் தவர்களும்கூட அவர் களின் மதக் கடவுள் களை வழிபடக் கூடாது, ராமனையும், கிருஷ்ண னையும் வணங்கத் தயா ராக இருக்க வேண்டும். அவர்களின் மதங்களை இந்து மயமாக, இந்திய மயமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் முசு லிம்கள் குடி உரிமை யின்றிக் கூட வாழ வேண் டும். இந்து ஆண்களே! முஸ்லீம் பெண்களைக் கர்ப்பிணிகள் ஆக்குங் கள். அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜெனிக் கட்டும் என்று ஆர்.எஸ். எஸோ பி.ஜே.பி.யோ சொன்னால்  அதுதான் உண்மையான மதச் சார்பின்மை - இப்படி பாஷ்யம் செய்பவர்தான் இந்தப் பார்ப்பன சோ.
இது ஏதோ முஸ்லீம் களையும், கிறித்தவர் களையும் பார்த்துச் சொல்லுவதாக நினைக்க வேண்டாம்! கல்வி, வேலை வாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிற தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்  ஆதிக்கபுரியில் இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் அனைவரையும் கூட  சம பார்வையில் பார்த்து பட்டை நாமம் சாத்துவது தான் பா.ஜ.க.வின் சமத்துவப் பார்வை, மதச் சார்பின்மைப் பார்வை என்பது சோவின் பதிலில் உள்ளீடாக இருக்கிறது என்பதையும் மறந்து  விட வேண்டாம்.
கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் மோடி அரசின் மோசமான அணுகுமுறையால் ஆயிரக்கணக்கில் முஸ் லீம்கள் கொல்லப் பட்ட நிலையில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 287 பேர்களில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர். கொலை வெறியாட்டம் போட்ட ஒருவர்கூட இந்து இல் லவே இல்லை. ஆமாம் நம்பித் தொலையுங் கள்! இந்த மரண வியாபாரி நரேந்திர மோடிதான் இந்தி யாவின் பிரதமராக வேண்டும் என்று துடி யாய்த் துடிக்கிற சோ ராமசாமி ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் மனுதர்மப் பேனாவைப் பிடித்துத் தானே எழுதுவார்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...