Saturday, October 22, 2011

ஆசான்


கோவையைச் சேர்ந்த கு.வெ.கிருஷ்ணசாமி அவர்கள்தான் நமது ஆசான்! மலையாளப் பெருங்கவிஞர் குமரன் ஆசான் அவர்களின் படைப்புகள்மீது தீராக் காதல் கொண்டு, தம் பெயரையே ஆசான் என்று மாற்றிக் கொண்டவர்.
ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் புலமைமிக்கக் கதிரொளி! பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யறிவு ஆகியவற்றில் முதுநிலை (எம்.ஏ.) பட்டம் பெற்றவர். சட்டமும் பயின்றவர்.
அவர் எழுதிய நூல்கள் மொழி உரிமை, சாதி உரு வாக்கம், பாவேந்தர் பெரியார், குமரன் ஆசான், ஈழத் தமிழர் உரிமைப் போர்; சாகுமகராஜ், மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடை யாளம், Gora’s Positive Etheism and firewill, Thiruvalluvar on Learning and Wisdom உள்ளிட்ட நூல் களை உருவாக்கிய சிற்பி!
உலகப் புகழ் பெற்ற அறி வியல் - நாத்திக சிந்தனை யாளரான ரிச்சர்ட் டாக் கின்ஸ் அவர்களால் எழுதப் பட்டு உலகையே குலுக்கி எடுத்த நூலான ‘‘The God Delusion’’ என்ற ஆங்கில நூலை கடவுள் ஒரு பொய் நம்பிக்கை எனும் தலைப்பில் மிக அரும்பாடுபட்டு, அழகுத் தமிழில் அவர் மொழியாக்கம் செய்தது - அவருக்குள் அடங்கிக் கிடந்த பேராற்றல் செல்வத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது. காலம் சொல்லிக் கொண்டேயிருக் கும்; நாத்திக உலகம் இந்த மானுட அருந்தொண்டுக் காக ஒரு முக்கியமான இடத்தை அளித்துக்கொண் டும் இருக்கும்.
மிகச் சிறந்த மொழி பெயர்ப்பு நூல் என்று தமிழ் நாடு அரசு பரிசு அளித்துப் பாராட்டியது என்றால், அவர்தம் மொழி சார்ந்த பகுத்தறிவுப் பெரும்பணியை யார்தான் மறக்க முடியும்?
அருப்புக்கோட்டை டி.கே. கைலாசம் அறக்கட்டளை சார்பில் அவர் ஆற்றிய உரை மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடை யாளம்! எனும் ஆய்வு நூலாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள் ளது. இந்த உரைக்காக பெரியார் பேருரையாளர் எனும் பட்டம் வழங்கப்பட்டது. நமது Think-Tank ஆசான் என்று நமது ஆசிரியர் குறிப்பிடுவார்கள்.
கடந்த பத்து ஆண்டு காலமாக பெரியார் திடலி லேயே தங்கி இயக்க ஏடு களுக்குக் கட்டுரைகளை வழங்கி, தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர் களுக்கு மாணிக்கத் தூணாக ஒளி வீசினார்.
விடுதலைக் குழுமத்தின் மூத்த சகோதரராக விளங்கி வழிகாட்டிய அந்த நந்தா விளக்கு, சற்றும் எதிர்பாராத விதமாக திடீர் என்று தன் மூச்சைத் துறந்துவிட்டது இதே நாளில் (2010) அதுவும் பெரியார் திடலிலேயே!
வாழ்ந்தால் அவர் போல் வாழவேண்டும் என்று ஆசைப் படுவோம்!
-மயிலாடன்

1 comment:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...