Thursday, September 29, 2011

பகத்சிங்கின் படிப்பாசை


தூக்கிலிடப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்னர் மாவீரன் பகத்சிங்கிடம் அவரது இறுதி ஆசை என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்த மாவீரன் அளித்த பதில்: நான் மாமேதை லெனின் அவர்களின் வரலாற்றைப் படித்துக் கொண்டு இருக் கிறேன். அதை முடிக்க விரும்புகிறேன் என்றாராம்.

உயர்ந்த நூல்கள் உங்களுடன் பேசும், உறவாடும், உங்களைக் கண்டுபிடித்து வாழ்க்கைப் பாதையில் அழைத்துச் செல்லும், போகும் வழியில் கிடக்கும் கல்லையும் முள்ளையும் நமக்குக் காட்டும். ஒதுங்கிப் போகும்படி நமக்கு உபதேசம் செய்யும். நூல்கள் படிப்பதைத் தினசரிக் கடமையாகக் கொள்வோம்.

படிப்பதற்கு நேரம் இல்லையென்று வருந்தாமல் படிப்பதற்கான நேரத்தை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்வோம்.வாழ்க்கையின் அங்கம் - வாசிப்பு என உணரு வோம். நம் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களைச் சேர்த்து வைத்தும் - அவற்றை வாசிக்க வைத்தும் நல்ல தாய் - தந்தையர் என்னும் போற்றுதலுக்கு ஆளாவோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...