
உயர்ந்த நூல்கள் உங்களுடன் பேசும், உறவாடும், உங்களைக் கண்டுபிடித்து வாழ்க்கைப் பாதையில் அழைத்துச் செல்லும், போகும் வழியில் கிடக்கும் கல்லையும் முள்ளையும் நமக்குக் காட்டும். ஒதுங்கிப் போகும்படி நமக்கு உபதேசம் செய்யும். நூல்கள் படிப்பதைத் தினசரிக் கடமையாகக் கொள்வோம்.
படிப்பதற்கு நேரம் இல்லையென்று வருந்தாமல் படிப்பதற்கான நேரத்தை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்வோம்.வாழ்க்கையின் அங்கம் - வாசிப்பு என உணரு வோம். நம் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களைச் சேர்த்து வைத்தும் - அவற்றை வாசிக்க வைத்தும் நல்ல தாய் - தந்தையர் என்னும் போற்றுதலுக்கு ஆளாவோம்.
No comments:
Post a Comment