Saturday, August 27, 2011

கழகத் தோழர்களின் முக்கிய கவனத்திற்கு

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி வலுவாக இருக்கும் இடத்திற்கு - கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கையின் அடிப் படையில் வெளியேற்றப்பட்ட ஆசாமிகள் - பொறுப்பாளர்கள் நேரில் சென்று, பல்வேறு நட்பாசைகளைக் காட்டியும், பண உதவி எவ்வளவு வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறியும், கழகத்தைப் பற்றிப் பல்வேறு அவதூறுகளைக் கற்பனையாகக் கூறியும் வலை வீசுவதாகத் தெரிய வருகிறது - இரண்டு மூன்று இடங்களில் இருந்து தலைமைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது இளைஞர்கள் முகத்துக்கு முகம் சரியானபடி பதிலடி கொடுத்த நிலையில், வந்தவர்கள் முகம் தொங்கி வந்தவழியே திரும்பி உள்ளனர்.

கழகப் பொறுப்பாளர்கள் இளை ஞரணி, மாணவரணியினரும் எச்சரிக் கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பணபலத்தால் சாதிக்கலாம் என்று பணத்தைக் கட்டிக் கொண்டு அலைவதாகத் தெரிகிறது. எங்காவது இதற்கு மேல் யாராவது தொடர்பு கொண்டால் உடனே தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்குமாறு கழப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
- கலி.பூங்குன்றன்,
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...