Saturday, August 27, 2011

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? சித்திரை முதல் நாளா?

- சி. செல்லையா
தலைவர்,  உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கனடா

தமிழருக்குத் தொடராண்டு இல்லை. தற்பொழுது நாம் கடைப் பிடிப்பது சித்திரை மாதம் முதல் நாள். அத்துடன் தை முதல் நாளைப் புத் தாண்டு பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

மற்றைய இனத்த வர்களுக்கு புத்தாண்டு ஒன்றுதான். தமிழருக்கு மாத்திரம் ஏன் இரு ஆண்டுகள்? ஆகவே தமிழராகிய நாம் புத்தாண்டு தை முதல் நாளா! சித்திரை முதல் நாளா என்பதைத் திட்டவட்டமாக முடிவெடுத்து அதைப்பின்பற்ற வேண் டும்.

தற்பொழுது நாம் கொண்டாடும் புத்தாண்டு சாலிவாகனன் எனும் வட நாட்டு மன்னரால் ஏற்படுத்தப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இவர் கி.பி. 78 இல் இம்முறையை ஏற்படுத்தினார். அவ்வாண்டு பிரபவ விபவ பிரம் மோஸ்துத என்ற 60 ஆண்டுகள், சித்திரை தொடக்கம் சூழற்சி முறையில் வருகின்றன.

இவைகளில் ஒரு ஆண்டு கூட தமிழ்ப் பெயரோ அல்லது தமிழி னத்துடன் தொடர்புடையதாகவோ இல்லை. ஆகவே தான் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது முறையல்ல என்று தீர்மானித்து, 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் புலவர்கள் கூடி தமிழர்க்கென்று ஒரு தனி ஆண்டுதேவை என்று கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும் முடிவு செய்தனர். ஆனால் அக்காலத்தில் பார்ப்பனர் மிகப் பலம் வாய்ந்தவர்களாக இருந்தமையால், அவர்களின் கடும் எதிர்ப்பால் இம்முடிவை ஒத்திவைக்க நேரிட்டது.

1971ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த பொழுது, திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று, தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் நடைமுறைப் படுத்த ஆணை பிறப்பித்தார். ஆனால் பார்ப்பனரின் எதிர்ப்பு வலுவாக இருந்தா லும், பார்ப்பனர்களுக்கு அடிவருடிகளாக இருந்து செயற்பட்ட தமிழ் அரசியல்வாதி களின் செயற்பாடுகளாலும் இத்திட்டம் மக்கள் மத்தியில் ஒரு குழப்பநிலையே காணப்படுகிறது.

மீண்டும் கலைஞர் தற்பொழுது ஆட்சிக்கு வந்ததும், தான் ஒரு தமிழன், ஆகவே தான் 1971 ம் ஆண்டு ஆணை பிறப்பித்த தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை மீண்டும் ஆணை பிறப்பித்து, அதற்கான சட்டப் பேரவைக் கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா தொடங்கி வைத்த போது, தை முதல் நாளே தமிழ்த் திரு நாளாக கலைஞர் அறிவித்ததையும் தெரி வித்து, இது இன்றிலிருந்து நடை முறைப்படுத்தப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இது ஜெயலலிதாவிற்குப் பிடிக்கவில்லை. தான் ஒரு பிராமணப் பெண், தான் மீண்டும் தலைமைப் பதவிக்கு வரும்போது இச்சட்டத்தை மாற்றி அமைப்பேன் என்று முழக்கமிட்டுள்ளார். ஆனால் கலைஞர் கூறுகிறார், செம் மொழி வருமே என்று கருதியது உண்டா? வந்ததா இல்லையா? அதேபோல தமி ழாண்டு தை முதல் நாளே என்று வந்தே தீரும்.

புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடல் களும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை வலியுறுத்துகின்றன.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்கு
தமிழ்ப் புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழருக்குத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தையே முதற்றிங்கள்;
தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று, பல்லாயிரத்தாண்டாய்த்
தமிழர் வாழ்வில்
புத்தாண்டு  தை முதல் நாள் பொங்கல் நன்னாள்

புதுவருடப்பிறப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டிய நாள். சித்திரை மாதம் தமிழரின் தாயகங் களான தமிழ்நாடு, புதுவை, தமிழீழம் ஆகிய பிரதேசங்களில் சூரிய வெப்பம் அதிகரிக்கும் மாதமாக உள்ளது. தை மாதம் சூடும் குளிரும் குறைந்த மாதம். அத்துடன் விவசாயிகள் அறுவடை முடித்து விட்டால் தானியங்களைத் தங்களது வீட்டிற்குக் கொண்டு வந்து மனநிறைவுடன் குடும்பத்துடன் அனை வருடனும், நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
 
இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது தை முதல் நாளே தமிழர் புத்தாண்டாக ஏற்று உலகத் தமிழினம் நடைமுறைப்படுத்துவது சாலச்சிறந்தது.
நன்றி: சுதந்திரன் வார இதழ், ஈழம்.

1 comment:

புகல் said...

சுறவம் 1ல்(தை 1) தமிழன் புத்தாண்டு கொண்டுவதுதான் சிறப்பாக இருக்கும்
என்று என் சக பணியார்களிடமும், தோழர்களுடனும் பேசியுள்ளேன்,
ஆனால் அவர்களின் பதில் மிக தற்குறியாக இருக்கும்,
எ-டு
நிங்க என்ன தி.மு.கா சார்பா,
சிலபேர் சுறவம் 1ல்(தை 1), மேழம் 1(சித்திரை 1) எதில் கொண்டாடினால் என்ற நகைப்பு வேற
சிலபேர் இவரு யாரு தமிழ் புத்தாண்டை மாத்துறது என்ற பேச்சு ஒரு பக்கம்.

கலைஞரை பிடிக்காமல் இருப்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்
ஆனால் தமிழுக்கு ஒரு நல்லது என்றால் நாம் அதை வரவேற்ப்பதுதான் நாகரிகம்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...