Tuesday, August 30, 2011

கோவிலுக்குக் காணிக்கை எந்தப் பணத்திலிருந்து?


அய்யா, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் சுரங்க ஊழல் காரணமாக கர்நாடக அரசுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்ப அறக் கட்டளைக்கு முறைகேடாக ரூ.30 கோடி வழங்கப்பட்டதாகவும் லோக் அயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவி லுக்கு, 6 மாதத்திற்கு முன்பு ரிஷபம் வாகனம் தங்கத்தில் செய்ய ரூபாய் 40 லட்சம் எடியூ ரப்பாவால் வழங்கப்பட்டது.

இந்த பணம் சுரங்க ஊழலில் சம்பந்தப் பட்ட பணமா என சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும். மேலும் அரசு உயர் பதவியில் உள்ளவர்கள் கோவில் களுக்கு மக்கள் வரி பணத்தையும், ஊழல் மூலம் பெறப்படும் கோடிக்கணக்கான பணத் தையும், தங்க நகைகளையும், ஆபரணங் களையும் நன்கொடையாக அளிப்பதை தடை செய்து விசாரணை செய்ய வேண்டும்.
- க.பதிஜெயசங்கர், திருநள்ளாறு

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...