Monday, August 22, 2011

கில்லாடி கிருஷ்ணனுக்கு வாழ்த்து - ஏன்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா: உயிர் களைக் காத்து உலகா ளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு ஸ்ரீகிருஷ் ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ந்து கொண்டாடும் அனை வருக்கும் என் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

டவுட் தனபாலு: அடே யப்பா . . . இதுல எனக்கு ஒரு டவுட்டும் இல்லை. . . ரம்ஜானுக்கும், கிருஸ் துமஸ்சுக்கும் மட்டு மில்லாம, கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்றது கடமைதான்னு நினைக்கிற ஒரு முதல்வர், உங்களுக்குப் பிறகு கிடைக்குமாங்குறது மட்டும்தான் டவுட் . . .!

(தினமலர் 21-8-2011)

ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் எதையெல்லாம் சொல்லி வாந்தி எடுப்பார் களோ, அதையே தின மலர் சொல்லுவது ஆச்சரி யமான ஒன்றல்ல; காரணம் அந்தக் குட்டையில் ஊறி, நாறிப்போன மட்டைதானே தினமலர்?

அதே நேரத்திலே தின மலரோ, தினமணியோ, துக்ளக்கோ, கல்கியோ அண்ணா தி.மு.க. என்று கட்சிக்குப் பெயரை வைத் துக் கொண்டிருக் கிறீர்களே, கட்சியின் கொடியில் அண்ணாவின் படத்தைப் பொறித்துள்ளீர் களே, அப்படிப்பட்ட நீங்கள் அண்ணாவின் கொள்கை களைப் பின்பற்றக் கடமைப் படவில்லையா?

அண்ணா வின் பகுத்தறிவுக் கொள்கைக்கு எதிராக கிருஷ்ண ஜெயந்திக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து களைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே - இது சரியானதுதானா? என்று எப்பொழுதாவது கேள்வியைக் கேட்டுள் ளார்களா? (அண்ணா வின் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு விட்டோம் என்பதற்கு அடையாளமாகத்தானே கொடியில் அண்ணாவின் படத்தைப் பொறித்துக் காற்றில் பறக்கவிட்டுள் ளோம் என்று சொன்னா லும் (சிம்பாலிக்காக) சொல்லக்கூடும்).

அண்ணா இது பற்றி யெல்லாம் என்னதான் சொல்லி இருக்கிறார் என்று தெரியுமா என்பதே முதற்கேள்வி.

இந்துக் கடவுள்களைப் பற்றி அறிஞர் அண்ணா என்னதான் சொல்லியி ருக்கிறார்?

கட்சியின் கடவுள், மதம் பற்றிய கொள்கை, நிலைப் பாடு என்ன என்பது பற்றி அண்ணா அவர்கள் எழுதி யுள்ளார். (திராவிடநாடு - 15-10-1944)

திராவிட மக்கள் சிலரால் வழிபடப்படும் கடவுள் அல்லது கட வுளர், உண்மையாகவே திராவிடரின் கடவு ளராகவும், திராவிட மொழிகளில் ஒன்றை யாவது தெரிந்தவர் களாகவும் இருந்தால், திராவிட மக்களைக் கொண்டே திராவிட மொழிகளிலேயே தங்களுடைய காரியங் களை எல்லாம் நடை பெறும்படி செய்திருப்பர்.

இன்றுங்கூட திராவிட நாட்டிலுள்ள கோவில் களில் நடைபெறும்படி செய்திருப்பர். இன்றுங் கூட திராவிட நாட்டி லுள்ள கோவில்களில் நடைபெறும் வழிபாடு (பூசை)களை எல்லாம் ஆரியப் பார்ப்பனர் களைக் கொண்டே வட மொழியில் நடைபெற்று வருவது கண்கூடு.

ஆகையால் வட மொழித் தேனைப்பருகி, ஆரியக் கொள்கையைக் கற் கண்டெனச் சுவைத்துத் தமிழ் மக்களைச் சூத் திரர்களாக்கித், தமிழ் மொழியைத் தமக்கேற்ற தல்லவாக்கித் தமிழர் கொள்கைக்கு இடமளி யாது நிற்கும் ஒரு கடவுள், அது எத்த கையதாய் இருப்பினும் சரியே. அதனிடம் எத் தனை ஆற்றல் இருப் பினும் சரியே. அதனைத் தன் கடவுள் என்று எந்தத் திராவிடனாவது ஏற்றுக் கொள்வானா?

- என்று அறிஞர் அண்ணா எழுதியுள் ளாரே! அந்த வகையில் பார்த்தால் தமிழர்களைச் சூத்திரர்களாக்கும் ஆரி யக் கடவுளான கிருஷ்ண ஜெயந்திக்கு அல்லவா - அணணா பெயரையும், திராவிடப் பெயரையும் கட்சியில் வைத்துள்ள முதல் அமைச்சர் வாழ்த் துத் தெரிவித்துள்ளார்?

இந்தச் சிந்தனை எந்த விதத்திலும் அ.தி.மு.க. வுக்கு வந்துவிடக்கூடாது என்பதிலேயே பார்ப்பன ஊடகங்கள் ஆகா எப்படியெல்லாம் பம்மாத் துக் கொட்டம் அடிக் கின்றனர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...