Monday, August 22, 2011

விடுதலை 22-08-2011

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் விவகாரம்: கோவில் தங்கத்தைத் திருடிய மன்னரின் வாரிசு!
குற்றம்சாட்டுகிறார் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்
உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துக!
வெளிநாடுகளில் தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக கோயில் தங்கத்தை அரசே எடுத்துக் கொள்ளலாமே!

தமிழர் தலைவர் அறிக்கை

பத்மநாபசாமி கோயிலில் உள்ள தங்கத்தை மன்னர் குடும்பத்தின் வாரிசுதாரரான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா திருடியுள்ள தாக கேரள மாநில முன்னாள் முதல் அமைச்சரும், இந்நாள் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் குற்றம்சாற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டி, மன்னர் குடும்பத்தவர்மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

கைவல்ய சாமியார்

சுவாமி கைவல்யம் என்று போற்றப்படும் கைவல்யம் அவர் களின் இயற்பெயர் பொன்னு சாமி. மலையாள நாட்டில் கள்ளிக் கோட்டையில் இந்நாளில் தான் பிறந்தார் (1877)

குடிஅரசு இதழில் இவர் எழுதிய இந்து மத வேத, சாஸ்திர, இதிகாச புராண எதிர்ப்புக் கட்டுரைகள் என்பவை அசைக்க முடியாத உருக்கு மலை போன்றவை. அதில் ஒரு வரியைக் கூட மறுத்து எழுதிட எந்தக் கொம்பனும் அன்றும் பிறக்கவில்லை; இன்றும் இல்லை.

அன்னா ஹசாரேயின் இயக்கம் சமூக நீதிக்கு எதிரானது - மனுதர்மத்தை ஆதரிப்பது


ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு நாடு முழுவதிலும் பெரும் ஆதரவு உள்ளது என்றாலும், பல முன்னணி தாழ்த்தப் பட்ட தலைவர்கள், அறிஞர்கள், தலித் பிரச்சினைகள் பற்றி அடிக்கடி எழுதுபவர்கள் இந்த இயக்கத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அது ஜாதிய வெறித் தன்மை கொண்டது என்றும், நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

துரிதப்படுத்துமா தமிழ்நாடு அரசு?

ஆகஸ்டு - 22 இந்த நாளில் 2006ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை வலி யுறுத்தும் சட்டம் மீண் டும் கொண்டு வரப் பட்டது.

69 சதவிகித அடிப் படையில் தேர்வு செய்யப்பட்டு, அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப் பட்டு, அவர்களுக்குக் கோவில்களில் பணிய மர்த்தம் செய்யப்படும் கால கட்டத்தில், பார்ப் பனர்கள் வழக்கம்போல உச்சநீதிமன்றத்திற்குப் படையெடுத்து இடைக் காலத் தடையை வாங்கி யுள்ளனர்.

பின்னணி என்ன?

அன்னாஹசாரே என்பவரை மய்யப்படுத்தி - ஊழலுக்கு எதிர்ப்பாக அரங்கேற்றப்பட்டுள்ள பட்டினிப் போராட்டம் திட்டமிட்ட ஒரு நாடகம் என்பதில் அய்யமில்லை. அடுத்த மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஒத்திகையாகும்.

பாரதிய ஜனதா என்னும் ஆர்.எஸ்.எஸின் முகமூடியை அதிகார பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடு. பாரதிய ஜனதா கட்சிக்குள் முட்டல் - மோதல்கள் ஆயிரம் ஆயிரம்.

சந்தோஷம் தந்த சந்தோஷம்!

உலகம் ஒப்புக் கொண்ட ஒப்பற்ற சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்கள் ஒருமுறை சொன்னார்:

மக்களில் பலர் சூழ்நிலைகள் தங்களுக்கு வாய்ப்பாக அமையவில்லை என்றே குறைபட்டுக் கொள்கின்றார்கள். எனக்கு அப்படிப்பட்ட எண்ணம் - அதாவது சூழ்நிலைகள் சரிவர அமைய வில்லை என்ற எண்ணம் எப்போதும் ஏற்பட்டதே இல்லை.

போர் சம்பவம்: நவம்பரில் இலங்கை அறிக்கை


கொழும்பு, ஆக.22- இலங் கையில் நடைபெற்ற போர்ச்சம் பவங்கள் குறித்து அந்நாட்டு அரசு அமைத்த விசாரணைக் ஆணையம் தனது அறிக்கையை நவம்பர் மாதம் தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.

2002ஆம் ஆண்டு முதல் 2009 மே மாதம் வரை இலங்கை ராணு வத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே நடந்த சண்டையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்ப வங்கள் குறித்து விசாரிக்க அந் நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார்.

கொடூரத்திற்கு அளவே இல்லையா? தமிழ்ப்பெண்களின் கொங்கைகளை அறுக்கும் சிங்கள வெறியர்கள்
யாழ்ப்பாணம், ஆக 22- இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்கள வெறியன் புகுந்து தமிழ்ப் பெண்களின் மார்பகங் களை குத்திக் கிழிக்கும் கொடூர சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
நெஞ்சைப் பிளக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
இலங்கை தமிழர் பகுதிகளில் முள்ளி வாய்க்கால் சம்பவத் திற்கு பிறகு சிங்களக் குடியேற்றம் அதிகரித்து வருகிறது. சிங்கள ராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டு வரு கின்றன.

பத்மநாப சுவாமி கோயில் விவகாரம் அச்சுதானந்தன் பேச்சுக்கு கேரள அரசு கண்டனம்


திருவனந்தபுரம், ஆக.22 -பத்மநாப சுவாமி கோவில் பொக் கிஷங்களை மன்னர் திருடிச் சென்றதாக கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந் தன் கூறியதற்கு, அம் மாநில அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர்.
கேரளாவில் திரு வனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள 5 ரகசிய அறை களில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப் புள்ள பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கில்லாடி கிருஷ்ணனுக்கு வாழ்த்து - ஏன்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா: உயிர் களைக் காத்து உலகா ளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு ஸ்ரீகிருஷ் ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ந்து கொண்டாடும் அனை வருக்கும் என் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

டவுட் தனபாலு: அடே யப்பா . . . இதுல எனக்கு ஒரு டவுட்டும் இல்லை. . . ரம்ஜானுக்கும், கிருஸ் துமஸ்சுக்கும் மட்டு மில்லாம, கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்றது கடமைதான்னு நினைக்கிற ஒரு முதல்வர், உங்களுக்குப் பிறகு கிடைக்குமாங்குறது மட்டும்தான் டவுட் . . .!

(தினமலர் 21-8-2011)

ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் எதையெல்லாம் சொல்லி வாந்தி எடுப்பார் களோ, அதையே தின மலர் சொல்லுவது ஆச்சரி யமான ஒன்றல்ல; காரணம் அந்தக் குட்டையில் ஊறி, நாறிப்போன மட்டைதானே தினமலர்?


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...