Wednesday, August 31, 2011

விநாயகனால் வந்த வினை


விக்னேஷ்வரன் - விக்னம் இல்லாமல் காப்பவன் என்று வித்தாரமாகப் பேசுகிறார்கள் - விநாயகனுக்குத் தோப்புக் கரணம் போட்டுச் சென்றால் நினைத்தது நடக்கும் என்றெல்லாம் புராண புழுதிகளைக் கொட்டி வைத்துள்ளனர்.
அதேநேரத்தில் இந்த விநாயகனால் இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்ற வரலாறு தெரியுமா?
மகாராட்டிர மாநிலம் புனேயில் பிளேக் நோய் கடுமையாக பரவிய காலகட்டம். எலிகள் செத்து விழுந்து அதிலிருந்து கிருமிகள் பரவி பிளேக் நோயைக் கொடுத்துவிடும்.
பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளைக் கொல்லும் இயக்கத்தை வெள்ளைக்கார அரசு தீவிரப்படுத்தியது - மனிதாபிமானத்தோடு, மக்களை நோயிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையைத்தான் பிரிட்டீஷ் அரசு செய்தது.
திலகர் பெருமான், திலகர் பெருமான் என்று தேள் கடிக்கு ஆளானவர்கள்போல் கதறுகிறார்களே - அந்த லோகமான்ய பால கங்காதரர் என்ற, கொழுத்த மீசைக்காரத் திலகர் பெருமான் என்ன வேலை செய்தார் தெரியுமா?
நமது பகவானாகிய விநாயகனின் வாகனம் எலி. அதன்மீது மிலேச்சர்களான - கிறிஸ்துவ வெள்ளைக்காரர்கள் கை வைத்துவிட்டனர் - வேட்டையாடி ஒழிக்கக் கிளம்பிவிட்டனர்! போச்சு! போச்சு!! நமது மதம் போச்சு - கலாச்சாரம் போச்சு என்று மதவெறியைக் கிளப்பி விட்டார்.
இதன் விளைவு என்ன தெரியுமா?
புனே நகரில் எலி ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த இரு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைக்குக் காரணமாக தூண்டி விட்டவர் என்ற முறையில் திலகருக்குப் பதினெட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வெள்ளைக்காரன்தான் கணவன் செத்தால், அவன் மனைவியையும் அவனோடு சேர்த்து எரிக்கவேண்டும் என்றிருந்த சதி என்ற உடன்கட்டை முறையை ஒழித்தான்.
குழந்தைப் பருவத்திலேயே பெண்களுக்குக் கலியாணம் செய்யும் கொடுமைக்கு முட்டுக்கட்டை போட்டான்.
இந்த இந்துத்துவாவாதிகளோ பழைமைக் குட்டையில் ஊறிய பாசிகளாக இருந்து மக்களைப் படுபாதாளத்தில் தள்ளினார்கள்.
விநாயகனை முதன்மைப்படுத்தி ஊர்வலம் நடத்தி, மக்களிடம் பெரும் அளவில் புழக்கத்திற்குக் கொண்டு வந்தவர் இந்தத் திலகர்தான். இவர்தான் ஆர்.எஸ்.எஸ்.வெறியின் மூலத்துக்கு வித்து போட்ட ஆலகால விஷம்!
அதனைக் கையில் எடுத்துக்கொண்டுதான் விநாயக சதுர்த்தி ஊர்வலம் என்று கூறி மற்ற மற்ற மாநிலங்களிலும் அதனை அரங்கேற்றி வன்முறை வெறியாட்டங்களை நடத்திக் கொண்டும் திரிகிறார்கள்.
ஆக, விநாயகன் என்பவன் விக்னேஷ்வரன் அல்ல. விக்னங்களைக் களைபவனும் அல்ல. மாறாக விக்னங்களை, வன்முறைகளை உற்பத்தி செய்வதற்கு இந்து வெறிக்கூட்டத்துக்குக் கையில் கிடைத்த மதக் கருவி - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...