Monday, August 1, 2011

மண் குதிரையை நம்பிய கதை!

கடந்த வார துக்ளக்கில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு வார்த்தைகூட எழுதாத திருவாளர் சோ ராமசாமி இந்த வார இதழில் (3.8.2011) தன் ஆற்றாமையை வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பித் தீர்த்துள்ளார்.

கடைசியில் வேறு வழியில்லாமல் அ.தி.மு.க. அரசுக்கு ஊரோடு ஒத்துப் போகச் சொல்லியிருக்கிறார்.

சென்ற அரசின் சமச்சீர், சமத்தாழ்வுதான்; அதை நீதிமன்றம் ஏற்றது சரியல்ல; கொள்கை முடிவில் நீதிமன்ற குறுக்கீட்டாகத்தான் இது காட்சியளித்தது.

ஆனால் சரியோ, தவறோ, நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தபோது - நிச்சயமற்ற தன்மை தொடர்வதால், மாணவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சினையை மனதில் கொண்ட புதிய அரசு, இந்த ஆண்டு அதையே அமல் செய்து, அடுத்த ஆண்டுக்கு மாற்றங்களுடன் கூடிய புதியமுறையை வகுத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அப்பீல்கள் செய்து, தமிழக அரசு மாணவர்களின் குழப்பத்தை நீட்டித்தது; இது தவிர்க்கப்பட்டி ருக்க வேண்டும் என்ற விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது என்று துக்ளக் தலையங்கம் கூறுகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...