Thursday, July 28, 2011

தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன்னாட்டு மாநாடு

  • பல்கலை. வேந்தர் கி. வீரமணி தலைமை வகித்து உரையாற்றினார்
  • இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சிறப்புரையாற்றினார்

வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன்னாட்டு மாநாடு மலர் வெளியிடப்பட்டது. பதிவாளர் மு. அய்யாவு, இணைவேந்தர் வீகேயென் கண்ணப்பன், துணைவேந்தர் நல். இராமச்சந்திரன், வேந்தர் கி. வீரமணி, மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், விஞ்ஞானி ஆ. சிவதாணுபிள்ளை, டாக்டர் எம்.எஸ். பழனிச்சாமி ஆகியோர் உள்ளனர்.


வல்லம், ஜூலை 27- வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன் னாட்டு மாநாடு மற்றும் கருத்துக் காட்சி தொடக்க விழா பெரியார் மணி யம்மை பல்கலைக் கழ கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மற்றும் பல அறிஞர் பெருமக்களும், அமெ ரிக்கா, கனடா நாட் டைச் சேர்ந்த பேராளர் களும் பங்கேற்றனர்.

வளரும் பசுமைத் தொழில்நுட்ப பன் னாட்டு மாநாடு மற்றும் கருத்துக் காட்சித் தொடக்க விழா 27.7.2011 அன்று காலை 11.30 மணிக்கு தஞ்சை வல்லத் தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் உள்ள பன் னோக்கு உள் விளை யாட்டு அரங்கில் மிகச் சிறப்பாகத் தொடங்கி நடைபெற்றது.

இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரை யும் பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்நுட் பக் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் எம்.எஸ். பழனிச்சாமி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் வீகேயென் கண்ணப் பன் ஆகியோர் முன் னிலை வகித்து உரை யாற்றினர்.

டாக்டர் கி. வீரமணி

பெரியார் மணி யம்மை பல்கலைக் கழ கத்தின் வேந்தர் டாக்டர் கி. வீரமணி இவ்விழா விற்குத் தலைமை வகித்துப் பேசினார்.

இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் மாநாடு மற்றும் கருத் துக் காட்சியினைத் தொடங்கி வைத்து விழா நிறைவுப் பேருரையாற் றினார்.

டாக்டர் சிவதாணுபிள்ளை

புதுடில்லி பாதுகாப்பு அமைச்சகம் பிரமோஸ் ஏவுகணைத் திட்டம் ஆராய்ச்சி மற் றும் வளர்ச்சி, தலை மைக் கட்டுப்பாட்டா ளர் விஞ்ஞானி டாக்டர் ஆ. சிவதாணுபிள்ளை கார்பன் சமநிலைபற்றிய பல்கலைக் கழக ஆவ ணத்தை வெளியிட்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மிகத்திரளான மாணவ, மாணவிகள் மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற முக்கிய நாட்டுப் பேராளர்கள், பேரா சிரியர்கள் பங்கேற்றனர்.


மத்திய அரசின் நிதி உதவியுடன் பல்வேறு கழிவு பொருள்களிலிருந்து உயிரி எரிசக்தியையும், மின்சக்தியையும் உருவாக்குகின்ற ஆராய்ச்சி நிலையத்தை மகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்தார் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம். முன்னதாக வேப்பமரக்கன்றையும் நட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...