Monday, July 25, 2011

பா.ஜ.க. தேர்தலில் நிற்க தகுதி உடையதுதானா?

பாரதிய ஜனதா கட்சி ஆளும் கருநாடக மாநிலத் தில் பகவத் கீதை கட்டாய பாடமாக ஆக்கப் பட்டுள்ளது.

பகவத் கீதை என்பது இந்து மதத்தின் நூல். பிறப்பின் அடிப்படையிலானது - வருணம் - ஜாதி என்பது; அதனை நானே படைத்தேன் - படைத்தவன் நானாக இருந்தாலும் நானே நினைத்தாலும் அதனை மாற்றியமைக்க முடியாது என்று கீதாசிரியன் கிருஷ்ணன் சொல்லியிருப்பதாக பகவத் கீதை சொல்லுகிறது.

பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறிப் பெண்களை இழிவுபடுத்துகிறது.

இத்தகைய பிற்போக்கு நூலை மாணவர்களுக்குக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால், இதைவிட ஆபத்தானது வேறு ஒன்று இருக்க முடியுமா?

இளம் பிஞ்சுகள் மத்தியில் விகற்பத்தை, வேற்றுமையை, வெறுப்பை விதைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...