Wednesday, May 4, 2011

அப்படிப் போடு சிக்சர்!



விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல; வெற்றி பெறத் தேவையானவை திறமை, தன்னம்பிக்கை, துணிவே!

ஆனால், இந்தியாவின் கிரிக்கெட் விளை யாட்டுக்காரர்கள் (வீரர்கள் அல்லர்) இருக்கி றார்களே நொண்டிக் கழுதைக்கு சறுக்கியது சாட்சி! என்ற பழமொழிதான் அவர்களுக்குப் பொருத்தம், மிகவும் பொருத்தம்!

அய்.பி.எல். கிரிக்கெட் என்னும் 20 ஓவர் போட்டி இந்தியா முழுமையும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவின் பெரும் பணக்கார முதலைகள் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களை ஏலம் எடுக் கிறார்கள். (அடக் கொடுமையே! இவர்கள் என்ன கத்தரிக்காயா, சுண்டைக்காயா- ஏலம் எடுக்கப்பட!).

கிரிக்கெட் அணியில் விளையாடுபவர்களைவிட ஏலம் எடுப்பவர்கள்தான் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதிலே துடியாய்த் துடிக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முதலாளி முகேஷ் அம்பானி!

அவர் மனைவி நீதா.... மும்பை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கொச்சி டஸ்கர் கேரளா அணிக்கும் போட்டி, முடிவில் மும்பை அணி தோல்வியைச் சுமந்தது.

பணம் போட்டவர்களாயிற்றே, சும்மா இருப்பார் களா? ஜோதிடரைத் தேடினார்கள்.

அந்த ஜோதிடரும் மும்பை ஸ்டேடியத்துக்கு வந்தார் - கண்டார் - கண்டுபிடித்தார் - அடே யப்பா, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இவரிடம் மடிப் பிச்சை வாங்கவேண்டும் போங்கோ!

கண்டுபிடித்துவிட்டார் - மும்பை அணியின் தோல்விக்குக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டார். ஆம், மும்பை அணியினர் ஸ்டேடியத்தின் வலப்புறத்தில் உள்ள ஓய்வு அறையைத் தேர்ந்தெடுத்ததுதான் தோல்விக்குக் காரணமாம்!

இந்துத்துவா என்னும் கோழைத்தனம்!

இடது பக்க அறையைத் தேர்ந்தெடுத்து இருந்தால் கோப்பை அவர்களுக்குத்தானாம். (இந்தியாவில் இந்த இந்துத்துவா மனப்பான்மை தான் விளையாட்டுக்காரர்களைக்கூடக் கோழை யாக்குகிறது).

முகேஷ் அம்பானிகளும், மல்லையாக்களும், ஷாருகான்களும் சச்சின் டெண்டுல்கர், தோனி, ரெய்னா, கெயில் என்று விளையாட்டுக்காரர்களை விளையாட்டாகக்கூடத் தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஜோதிடரைப் பார்த்து அவர் என்ன சொல்லு கிறாரோ, அதன்படி எந்த ஓய்வு அறையைத் தேர்வு செய்யலாம், எந்தக் கலர் கர்ச்சிப்பை சட்டைப் பையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற சமாச்சாரங்களைக் கடைப்பிடித்தாலே போதுமானது.

இதன்படி அதுவரை கிரிக்கெட் மட்டையைப் பிடித்து அறியாத குப்பனிடமும், சுப்பனிடமும் மைதானத்தில் பேட்டைக் கொடுத்தால், அடேயப்பா, வெறும் சிக்சர் மழைதான்! அப்படித்தானே!

அட, பைத்தியக்காரர்களே, அய்தராபாத்தில் இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறவும், தான் அதிக ஓட்டங்கள் (ரன்) எடுக்கவும் புட்டபர்த்திக்குச் சென்று சாயிபாபாவிடம் ஆசி பெற்று வந்தாரே - (டெக்கான் கிரானிக்கல், 24.11.2005) பலன் கிடைத்ததா? அய்தராபாத்தில் டெண்டுல்கர் எடுத்த ஓட்டம் (ரன்) வெறும் இரண்டுதானே!

அதேபோல, பெங்களூருவில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், சாயிபாபா கொடுத்த மோதிரத்தை அணிந்து மைதானத்தில் இறங்கிய கவாஸ்கர் எடுத்த ஓட்டமும் இரண்டே இரண்டுதான். (திருச்சி மாலைமலர், 15.10.1987).

சாயிபாபாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்காத கபில்தேவ்தான் அந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக 72 ஓட்டங்கள் (ரன்கள்) எடுத்து, கடைசிவரையிலும் ஆட்டம் இழக்காமல் சிறந்த ஆட்டக்காரராகவும் (மேன் ஆஃப் தி மேட்ச்) விருது பெற்றார். 2003 இல் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியாதான் கோப்பையை வெல்லப் போகிறது என்று சவால்விட்டனர். ஊத்திக்கிட்டது தான் மிச்சம் - கிரிக்கெட் என்றாலே, ஓடும் ஜோதிடர்கள் என்று தினமலர் (26.3.2003) செய்தி போடும் அளவுக்கு ஜோதிடர்களுக்கு மரண அடி!

ஜோதிடத்தை நம்புவோரை சோண கிரிகள், வெறும் சோற்றுத் துருத்திகள் என்று விளிக்காமல் வேறு என்ன நாமகரணங்களால் சாற்றுவதோ!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...