Wednesday, May 4, 2011

அய்.நா. அமைத்த வல்லுநர் குழு என்ன சொல்கிறது? 3


புலன் விசாரணை பற்றிய விசாரணைக்  குழுவின் பரிந்துரைகள்

அ) போரில் ஈடுபட்ட இரு தரப் பினர் மீதும் கூறப்படும், அனைத்துலக மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டது என்ற குற்றச்சாற்றுகள் பற்றி உண்மையான புலன் விசாரணையை இலங்கை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்

ஆ) ஒரே நேரத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய செயல்பாடுகள் உள்ளிட்ட கீழ்க்குறிப்பிடப்பட்ட பணி களைச் செய்வதற்கான சுதந்திரமான, அனைத்துலக அளவிலான நடை முறை ஒன்றை உருவாக்க அய்க்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செய லாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1) உள்நாட்டு அளவில், உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நிவார ணம் அளிக்கும் நடவடிக்கைகளை  எந்த அளவுக்கு இலங்கை அரசு பயனுள்ள வகையில் மேற் கொள்கிறது என்பதை மதிப்பிட்டுக் கண்காணிப்பது மற்றும் அய்க்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு அவ்வப்போது தனது கண்டுபிடிப்புகளின் அடிப்படை யில் பரிந்துரை அளிப்பது.

2) உள்நாட்டில் உண்மையாக மேற் கொள்ளப்பட்ட சட்டம் மற்றும் உரிமை மீறல் வழக்குகள் பற்றிய விசா ரணையை ஒட்டி அவற்றைப் பற்றி சுதந்திரமாக புலன் விசாரணை செய்வது.

3)  போரின் இறுதிக் கட்ட நிகழ்வு களுடன் தெடர்புடைய,  தனக்கு அளிக்கப்பட்ட தகவல்களையும், இந்த விசாரணைக் குழு மற்றும் இதர அமைப்புகள் தொகுத்து அளித்த தகவல்களையும்,  பொருத்தமான எதிர் காலப் பயன்பாட்டிற்காகத் தொகுத்து பாதுகாத்து வைப்பது.

உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் அளிக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகள்

அ) வன்னிப் பகுதியில் உள்ள போரில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்துள்ள குடிமக்களின் உரிமைகள் மற்றும் கவுர வத்தை அங்கீகரிக்கும் வகையில் கீழ்க் குறிப்பிடப்பட்ட குறுகிய கால நடவடிக்கை களை இலங்கை அரசு கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

1)  அரசு, அதன் அமைப்புகள் மற்றும் அனைத்து துணை ராணுவப்படைகள், அரசின் ஆதரவு பெற்ற அல்லது அரசால் பொறுத்துக் கொள்ளப்பட்ட துணைப்படை கள் ஆகியவற்றின் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவது.

2) எஞ்சி இருக்கும் இறந்து போன வர்களின் பொருள்கள், உடல் உறுப்பு களைக் கைப்பற்றி அவர்களின் குடும்பத் தினரிடம் திரும்ப அளிக்கவும், இறந்து போனவர்களுக்கான சடங்குகளைச் செய்ய அனுமதி அளிக்கவும் வசதி செய்து தருவது.

3) இறந்து போனவர்கள், காணாமல் போனவர்கள் சார்பாக இறப்புச் சான்றிதழ் களை விரைவாகவும், மரியாதையுடனும், அவர்களின் குடும்பத்தினர் கேட்கும்போது எந்தவிதக் கட்டணமும் இன்றி, மேற் கொண்டு புலன்விசாரணை செய்வது மற்றும் சிவில் உரிமைகள் கோருவது ஆகிய உரிமைகளை சமரசம் செய்து கொள்ளாத முறையில்,  அளிப்பது.

4) அவர்களின் கலாச்சார மதிப்பீடு களையும், பாரம்பரிய பழக்க வழக்கங் களையும் மதித்து, உயிர் பிழைத்து இருக்கும் அனைவருக்கும் சமூக, மனோ ரீதியான ஆதரவை அளிப்பது.

5) காவலில் இருக்கும் புலம் பெயர்ந்த குடிமக்கள் அனைவரையும் விடுதலை செய்து, அவர்களின் முன்னாள் வீடு களுக்குத் திரும்பிச் செல்ல உதவி செய் வது, அல்லது அவர்களின் மறு வாழ்வுக்கு அவர்களின் விருப்பப்படி உதவி செய்து.

6) போரில் உயிர் பிழைத்திருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் அமைதியான இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கான இடைக்கால உதவிகளைத் தொடர்ந்து வழங்குவது.

ஆ) கட்டாயமாகக் கடத்தப்பட்டு காணாமற் போன குடிமக்கள் என்ன ஆனார்கள், இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பற்றி புலன் விசாரணை செய்து வெளிப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக கட்டாயப்படுத்தி, தன்னிச்சையின்றி காணாமல் போனவர்கள் பற்றிய பணிக் குழுவினை   (Working Group on Enforced and Involuntary Disappearances)இலங்கைக்கு வருகை  தர இலங்கை அரசு அழைப்பு விடுக்க வேண்டும்.

இ) நாட்டில் நிலவும் அரசியல் சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு,  நெருக் கடி நிலை பற்றிய சட்டங்களை இலங்கை அரசு உடனடியாக விலக்கிக் கொண்டு,  இலங்கையின் அனைத்துலகக் கடன்பாட் டுக்குப் பொருத்தமின்றி எதிராக இருக்கும் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் அனைத் துப் பிரிவுகளையும் திருத்தி அமைக்க வேண்டும்.

இந்த சட்டங்கள் மற்றும் இதர சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்படு பவர்கள் மற்றும் இதர மக்களைப் பொருத்த வரை கீழ்க் கண்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.

1)  தற்போது கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருக்கும் அனைத்து மக்களின் பெயர்கள்,  அவர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் பெயர் ஆகியவற்றை வெளியிடுவதுடன், அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அடிப்படையான சட்ட விதிகளும் தெரி விக்கப்பட வேண்டும்.

2) கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களும், தங்கள் குடும்ப உறுப்பினர் களையும், சட்ட ஆலோசகர்களையும் சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட வேண்டும்.

3) தாங்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவர்களுக்கு அனுமதி வழங் கப்படவேண்டும்.

4) கொடிய குற்றங்கள் இழைத் தற்கான ஆதாரங்கள் உள்ள வழக்கு களில் அவர்கள் மீது குற்றச்சாற்றுகள் பதிவு செய்துவிட்டு, மற்ற அனை வரையும் விடுதலை செய்வதுடன், மேலும் எந்த வித இடையூறுகளும் இன்றி அவர்கள் சமூகத்துடன் ஒன்று சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட வேண் டும்.

ஈ) மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும், கூட்டமாக மக்கள் கூடுவதையும், கருத்தை வெளிப் படுத்துவதையும் தடை செய்யும், அல்லது  அச்சத்தை ஏற்படுத்தும் சூழ் நிலையை உருவாக்கும் கட்டுப்பாடு களை நீக்கிவிட்டு,  அரசு இழைக்கும் வன்முறையை இலங்கை அரசு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். 

அ) போரின் இறுதி நிலையில் பெரும் அளவிலான போருக்குத் தொடர்பு இல்லாத குடிமக்கள் கொல்லப்பட்டதில் உள்ள அரசின் பங்குக்குப் பொறுப்பு ஏற்று இலங்கை அரசு ஒரு பொது அறிக்கை வெளியிடவேண்டும்.

ஆ) இறுதிக் கட்டப் போரின்போது கடுமையான உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப் பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் எளிதில் பாதிக்கப்பட இயன்ற குழுவி னருக்கு,  அனைத்துலக தரத்தின்படி நிவாரணம் அளிக்கும் செயல்திட்டம் ஒன்றை  இலங்கை அரசு உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...