Monday, March 21, 2011

வழக்குரைஞர் தொழிலுக்கு நுழைவுத் தேர்வா? தமிழர் தலைவர் கண்டனம்



சட்டக் கல்லூரியில் படித்து பார்-கவுன்சிலில் பதிவும் செய்து, வழக்குரைஞர் தொழிலைத் தொடங்குபவர்கள் நுழைவுத் தேர்வு ஒன்றை எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மருத்துவருக்கும், பொறியாளருக்கும் சார்ட்டெட் அக்கவுன்டென்ட் ஆகியோருக்கும் இல்லாத தகுதித் தேர்வு என்கிற நுழைவுத் தேர்வை, வழக்குரைஞர்கள் படித்து முடித்த பிறகு ஏன் வைக்க வேண்டும்?

வழக்குரைஞர் தொழிலில் இழந்த அக்ரகார ஆதிக்கத்தை மீண்டும் உள்ளே நுழைக்க மறைமுகத் தேர்வு மூலம் ஏற்பாடாகிறது.

மேலும் வழக்குரைஞர் தொழில் செய்யாமலேயே, பார்கவுன்சிலில் பதிவும் செய்யாமலேயே சட்டக் கல்லூரியில் படித்துவிட்டு நேரடியாக நீதிபதியாக நியமிக்கும் கொடுமை அக்ரஹார சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்டு முன்சீஃப் மேஜிஸ்திரேட்டுகள் ஒரு சிலர் நியமிக்கப்பட்டும் விட்டனர்.

பார்ப்பன சூழ்ச்சி!

சட்டப் படிப்பில் நெற்றியில் டிராயிங் வரைந்து கொண்டும், பட்டை போட்டுக் கொண்டும்,கிராஸ்பெல்ட் அணிந்து கொண்டும் இருக்கும் அக்ரஹார ஆத்தின் பேர் வழிகளின் ஆதிக்கத்தை சட்டத் தொழிலில் உடைத்தெறிந்து, தமிழர்கள் முன்னேறி தந்தை பெரியாரின் தொண்டால், திராவிடர் கழகத்தின் அயராத உழைப்பால் நம்மவர்கள் அட்வகேட் ஜெனரலாகவும், உயர்நீதிமன்றம் முதல் அனைத்து மட்டம் வரை நீதிபதிகளாகவும், சீனியர் கவுன்சிலர்களாகவும் வருவதை பிற்காலத்தில் தடுப்பதற்கான முன்கூட்டிய ரகசிய ஏற்பாடே இந்த எழுத்துத் தேர்வு ஆகும்.

மூன்று ஆண்டுகள் மற்றும் 5 அய்ந்து ஆண்டுகள் என முழு நேரமும் சட்டம் பயின்று, பல்கலைக் கழகத் தேர்வும் எழுதி, தேர்ச்சியும் பெற்று, பார்-கவுன்சிலில் பதிவும் செய்யப்பட்டு வழக்குரைஞர்களாகதொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகும், வேறு எந்த ஒரு தொழிலிலும் இல்லாத  வழக்குரைஞர்  நிர்ப்பந்தத் தேர்வு அவசியம்தானா? அது தேவையற்ற ஒன்றே!

லா-அகாடமி ஏற்படுத்தலாமே!

இதற்கு பார்-கவுன்சில் தேவையின்றிச் செலவிடும் நேரத்திற்கும், பண விரயத்திற்கும் பதிலாக இளம் வழக்குரைஞர்களை தொழிலில் ஊக்குவிக்க லா அகாடமி (டுயற ஹஉயனநஅல) போன்ற பயிற்சிப் பள்ளிகளை நடத்தலாமே! அதன் மூலம் தவறான, திசைமாறிய இளம் வழக்குரைஞர்களும் தொழிலை முறையாகப் பயிற்சி பெற்று சிறந்த வழக்குரைஞர்களாக மாற வாய்ப்புள்ளபோது, அதை விடுத்துத் தேவையின்றி இந்தத் தேர்வுகளைக் குறித்து வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டுமா? இந்த தேர்வில் தேறவில்லை என்றால், அவர் சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற்றதன் பொருள் என்ன? அவருக்குச் சட்டப் பட்டம் அளித்த பல்கலைக் கழகத் தின் நிலை என்ன? என்பதுபோல் தேவையில்லாத, வேண்டத்தகாத பிரச்சினை களைக் கிளப்பி பல்கலைக் கழகங்களுக்கும், சட்டக் கல்லூரிகளுக்கும் பிரச்சினை களை ஏற்படுத்தி, நாளடைவில் அது பெரும் பிரச்சினையாக - அரசாங்கத்திற்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடிய நிலையை ஏற்படுத்தி விடும்.

எனவே, ஆரம்பத்திலேயே முளையில் கிள்ளி எறிய வேண்டியதை விட்டு ஆணிவேர் பதிந்த பிறகு கட்டடம் இடிகிறதே எனக் கூச்சல் போட்டுப் பயன் இல்லை.

போராட்டம் வெடிக்கும்!

இது தொடர்பாக தேவைப்பட்டால் திராவிடர் கழகத்தின் மாணவர் அணி ஒத்த கருத்துடையவர்களை இணைத்துக்கொண்டு போராட்டம் நடத்தவும் தயங்காது.
- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...