Tuesday, January 4, 2011

கடவுள் நம்பிக்கையும் - ஒழுக்கமும்!

இன்றைக்குகூட பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்திருக்கிறது. நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் மேலத் தெருக் கரை யில் ஒரு கிறிஸ்தவ கோயில் உள்ளது. இந்த கோவிலில் திடீரென்று நான்கரை அடி உயர அந்தோணியார் சிலையை யாரோ வைத்து விட்டனர். இதைக் கண்டு அப்பகுதியில் உள்ளோர் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்குப் பதிலாக இன்னொரு பிரிவினர் இரண்டு நாகர் சிலைகளை அந்தோணியார் சிலை அருகே வைத் தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து ஆர்.டி.ஓ. வந்தார். இரண்டு சிலைகளையும் அகற்றுங்கள் என்று உத்தர விட்டார். அதன் பிறகுதான் அமைதி ஏற்பட்டது. ஆகவே கடவுளால்தான் பிரச்சினையே.
கடவுள் நம்பிக்கைக்கும் ஒழுக்கத்துக் கும் என்ன சம்பந்தம்? 1971இல் ஒரு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடந்தது.
தஞ்சையில் திறந்தவெளி சிறைச்சாலை ஒன்று இருக்கிறது. கைதிகளை அறையில் அடைப்பதில்லை. சுற்றிலும் சுவர். அவரவர்களுக்குத் தெரிந்த கைத் தொழிலைச் செய்வார்கள்.

தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவராக இருந்தவர் நாகையா. அவர்தான் அந்தத் திறந்த வெளிச் சிறைச்சாலையின் அதிகாரி.

தந்தை பெரியார், அவர்களை திறந்த வெளி சிறைச்சாலையைப் பார்வையிடு மாறு கேட்டுக் கொண்டார். தந்தை பெரியார் அவர்களும் சென்று சுற்றிப் பார்த்தார். அந்தச் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் இருந்தனர்.

தந்தை பெரியாரை எதிர்பாராத விதமாகக் காண நேர்ந்த அந்தக் கைதி களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தங்களுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக் கொண் டனர். சிறை அதிகாரியின் அனுமதியோடு தந்தை பெரியார் சிறிது நேரம் பேசினார்.

கூடியிருந்த கைதிகளைப் பார்த்து, உங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாத வர்கள் இருந்தால் கை தூக்குங்கள் என்றார் ஒருவரும் கை தூக்கவில்லை.

உடனே தந்தை பெரியார் - அவர்களைப் பார்த்துக் கேட்டார் நீங்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் தானே? கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தப்பு செய்யப் பயப்படுவார்கள். கடவுள் தண்டிப்பார் என்று கருதி குற்றங்களைச் செய்ய மாட்டார்கள் என்று சொல்லு கிறார்களே - அது உண்மையல்ல - பொய் என்பது உங்கள் விஷயத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டதா -இல்லையா?

எல்லோரும் குற்றம் செய்துவிட்டு - கொலையைச் செய்துவிட்டுத்தானே ஆயுள் தண்டனை பெற்றுள்ளீர்கள்! உங்கள் கடவுள் நம்பிக்கை, கொலை செய்யாமல் உங்களைத் தடுக்க வில்லையே என்று தந்தை பெரியார் கூறியது அனைவருக்கும் பொறி தட்டியது போல் இருந்தது.

இந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், மக்களை நல்வழிப் படுத்தவும் கடவுள் மறுப்பும், மத மறுப்பும் தேவைப்படுகிறது. தந்தை பெரியார்தம் பகுத்தறிவுக் கொள்கைகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டியுள்ளன.

திருச்சி - உலக நாத்திகர் மாநாடும் அந்த வகையில் மிக முக்கியமானது.

- செய்தியாளர்களிடம்
தமிழர் தலைவர் 4.1.2011

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...