Tuesday, March 10, 2020

கோயிலுக்கு வர வேண்டாம் - எச்சரிக்கை

கேரளாவில் 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், ‘‘ஆற்றுகால் கோயில் பொங்கல் விழா இன்று நடக்கிறது. கொரோனா அறி குறி இருப்பவர்கள் கோயிலுக்கு வரவேண் டாம். பொங்கல் நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். யாருக்காவது கரோனா பாதிப்பு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் அருகில் இருப்பவர்களை கண் டறியத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படு கிறது’’ என்றார் இதேபோல், சபரிமலைக்கும் கரோனா பாதிப்பு இருப்பவர்கள் வரவேண் டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றொரு கோயிலான திருமலைக்கும், இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் திருமலைக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூடுதல் இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...