Wednesday, March 11, 2020

கரோனா வைரஸ்: சீனாவில் சமூக நலப்பணியாளர்கள் 53 பேர் பலி


சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இங்கி லாந்து போன்ற வல்லரசு நாடு கள் உள்பட 101 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
சீனாவில் கரோனா வைர சுக்கு மேலும் 22 பேர் பலி யாகி விட்டனர். இதன்மூலம் அங்கு மொத்த பலி எண் ணிக்கை 3,119 ஆனது. அங்கு 40 பேர் புதிதாக இந்த தொற் றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அங்கு கரோனா பாதித்த பகு திகளில் பணியாற்றிய 53 சமூக நலப்பணியாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இது மக்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 80,735 ஆக இருந்தாலும், புதிய நோயா ளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. எனவே அங்கு இந்த நோய்க் காக அமைக்கப்பட்ட தற்கா லிக மருத்துவமனைகள் மூடப் பட்டு வருகின்றன. அந்தவகை யில் இந்த வைரசின் பிறப் பிடமான உகான் நகரில் 11 மருத்துவமனைகள் மூடப் பட்டு உள்ளன.
அதேநேரம் சீனாவுக்கு வெளியே இந்த வைரஸ் மிக வும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் கரோனா வுக்கு பலியானவர்கள் எண் ணிக்கை 21 ஆக உயர்ந்து விட்டது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக் கையும் 545அய் எட்டிவிட் டது. வைரஸ் பரவலின் வீரி யத்தால் நியூயார்க், வாசிங் டன், கலிபோர்னியா உள் ளிட்ட 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி.யான டெட் குரூஸ்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்த நபர் ஒருவ ருக்கு கரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே டெட் குரூ சும் தன்னைத்தானே தனி மைப்படுத்தி கண்காணிப்பில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே கரோனா நோயாளிகளுடன் சான் பிரான் சிஸ்கோவில் நிறுத்தப்பட்டு உள்ள அமெரிக்க கப்பலில் இருந்து பயணிகளை வெளி யேற்றும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. இந்த கப்பலில் இருக்கும் கனடா நாட்டவர்களை மீட்டு வர அந்த நாடு சிறப்பு விமானங் களை ஏற்பாடு செய்ய முடிவு செய்து உள்ளது.
தென்கொரியாவில் புதிதாக 248 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 7,382 ஆக உயர்ந்தது. அங்கு கரோனா வைரசுக்கு பலியா னோர் எண்ணிக்கையும் 51 ஆக அதிகரித்து உள்ளது.
இத்தாலியில் இருந்து சமீ பத்தில் அல்பேனியா திரும் பிய தந்தை, மகன் இருவருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டு இருப்பதன் மூலம், அங் கும் கரோனா வைரஸ் கால் பதித்துள்ளது. பாகிஸ்தா னின் கராச்சியை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மொத்த எண்ணிக்கை 7 ஆனது.
இங்கிலாந்தில் 273 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 3 ஆகி விட்டது. போலந்தில் வைரஸ் பாதித்தவர் எண் ணிக்கை 11 ஆக உயர்ந்திருப்ப தாக சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இவ்வாறு உலக அளவில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத் துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசின் பிடியில் சிக்கியிருக் கும் நிலையில், பலியானவர் களின் எண்ணிக்கையும் 3,800 அய் எட்டியுள்ளது.
இவ்வாறு வேகமாக பரவும் கரோனா வைரசின் பீதியால் பல்வேறு நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுத்து வரு கின்றன. அந்தவகையில் பிரான் சில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சி களுக்கு அரசு தடை விதித்து உள்ளது. அங்கு கரோனா பலி 19 ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் நாடு இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாட் டுக்குள் நுழைய தடை விதித்து உள்ளது. இதைப்போல சவுதி அரேபியாவும் இங்கிலாந்து, குவைத் உள்ளிட்ட 9 நாடுக ளுக்கு பயணத்தடை விதித்து உள்ளது. இஸ்ரேல் அரசு தங்கள் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டினரை தனிமைப் படுத்த பரிசீலித்து வருவதாக பிரதமர் பெஞ்சமின் நேட் டன்யாகு தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் இதுவரை கரோனா தொற்று கண்டுபிடிக்காத நிலையிலும், அங்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இத னால் ஏராளமான வெளி நாட்டு தூதர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டதால், பல தூதரகங்கள் நேற்று மூடப் பட்டு இருந்தன.
வங்காளதேசத்தில் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வருகிற 17ஆம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிட்டு இருந்த வங்காளதேச நிறுவ னர் ஷேக் முஜிபுர் ரகுமானின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...