Saturday, March 14, 2020

3000 புள்ளிகள் இறக்கம்: வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி


நாட்டின் பொரு ளாதார மந்த நிலை, கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பங்குசந்தை கடு மையான வீழ்ச்சியை சந்தித் துள்ளது. இன்று சுமார் 3200 புள்ளிகள் சரிந்து வரலாறு காணாத சரிவை சந்தித் துள்ளது.
புதனன்று சென்செக்ஸ் 35,697 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. ஆனால், வியாழன் காலை 34,472 புள் ளிகளில் வர்த்தகம் தொடங் கியது. ஆனால், அன்றைய வர்த்தகம் மேலும் குறைந்து, தற்போது 32,750 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.  அதுபோல, இன்று காலை முதலே சென்செக்ஸ் இறக்கத்தில்தான் வர்த்தக மாகி வருகிறது.
ஏற்கெனவே  2020-ஆம் ஆண்டு, ஜனவரி 20ஆ-ம் தேதி அதிகபட்சமாக 42,273 புள்ளிகளைத் தொட்டது. ஆனால், அதன் பிறகு, இன்று மிகக் குறைந்த புள்ளியாக  32,493 புள்ளிகள் அளவே வர்த்தகமாககி உள்ளது. சுமார் 9,780 புள்ளிகள் சரிந்து உள்ளது.
புதன் மாலை நிஃப்டி 10,458 புள் ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 10,039 புள்ளி களில் வர்த்தகமாகத் தொடங்கி 9,540 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நிஃப்டி தற்போது சுமா ராக 917 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
மேலும் இன்றைய பங்கு வர்த்தகத் தில்,  சென்செக்சின் 30 பங்குகளில் ஒரு பங்கு கூட ஏற்றத்தில் வர்த்தகமாக வில்லை என்பது தெரிகிறது.
மேலும், பங்கு சந்தையில் உள்ள  30 பங்குகளும் இறக்கத் தில் தான் வர்த்தக மாகிக் கொண்டு இருக்கின்றன.
பிஎஸ்இ-யில் 2,519 பங்குகள் வர்த்தக மாகின்றன. அதில் 184 பங்குகள் மட் டுமே ஏற்றத்திலும், 2,233 பங்குகள் இறக்கத்திலும், 102 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த் தகமாகின்றன.
இதனால் பங்கு சந்தையுயில் 11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட் களில் மேலும் வர்த்தகத்தில் சரிவு ஏற்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...