Tuesday, March 10, 2020

வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1 முதல் அமல்

தேசியமய மாக்கப்பட்ட பல வங்கிகளை இணைக்கும் செயல்திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென்றும், அதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவையால் வழங்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன்.

வங்கிகளின் இணைப்பு விபரங்கள்
* பஞ்சாப் நேஷனல் வங்கி யுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்படுகின் றன.
* கனரா வங்கியுடன் சிண் டிகேட் வங்கி இணைக்கப்படு கிறது.
* இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப் படுகிறது.
* யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங் கியும், கார்ப்பரேஷன் வங்கி யும் இணைக்கப்படுகின்றன.
நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது, “வங்கி கள் இணைப்பது தொடர் பாக சம்பந்தப்பட்ட வங்கிக ளின் இயக்குநர்கள் குழு கூட் டங்களில் முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன. வங்கிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள் ளது. இதில் ஒழுங்குமுறை பிரச்சினைகள் எதுவும் இருக் காது” என்றார்.
2017ஆம் ஆண்டு நாட்டு டைமையாக்கப்பட்ட வங்கி களின் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. தற்போது அந்த வங்கிகளின் இணைப்புக்கு பின்னால் நாட்டுடமையாக் கப்பட்ட வங்கிகளின் எண் ணிக்கை 12 ஆக குறையும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...