Saturday, February 29, 2020

பெண்களுக்கு எதிரான கட்சியே பா.ஜ.க.!



இதோ ஆதாரம்!

மும்பை, பிப்.29 மகராட்டிரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிசின் உதவியாளருமான நரேந்திரா மேத்தா மீது ‘‘தானே'' காவல் துறை பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராட்டிரா மாநிலத்தின் மீரா ரோடு தொகுதியின் முன் னாள்  சட்டமன்ற உறுப்பின ராக இருந்தவர் நரேந்திர மேத்தா. இவர் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னா விஸ்-க்கு மிகவும் வேண்டிய வர். இதனால், அவருக்கு உதவியாளராகவும் பணியாற்றி வந்தார்.

இவர்மீது, மீராரோடு பகு தியைச்சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைப்  புகார் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய நவ்கர் காவல்துறையினர், மேத்தா மீது பாலியல் வன் கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எப்போதும் பகட்டாகவும், செல்வந்தராகவும் காட்டிக் கொள்ளும் மேத்தா, பட்னா விஸ் உடனான நெருக்கம் காரணமாக, பல்வேறு முறை கேடுகளிலும் ஈடுபட்டு வந் தார்.  மும்பை புறநகர் தானே வின் மீரா, பயேந்தர் நகரங் களின் முக்கிய நபராக மும் பையின் வடமேற்குபகுதிவரை மிகுந்த செல்வாக்கு கொண் டவராக திகழ்ந்து வந்தார்.

தற்போது அங்கு சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மேத்தாவால் பாதிக்கப்பட்டப் பெண் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையறிந்த மேத்தா, கடந்த இரு நாள்களுக்கு முன்பு திடீரென, சமூக வலை தளங்களில் இருந்து விலகி னார். இது பல்வேறு சந்தேகங் களை எழுப்பிய நிலையில், பின்னர், அவர்மீது முறைகேடு கள் சமூகவலைதளங்களில் பரவத் தொடங்கி வைரலாகி வந்தது. இது பெரும் பரபரப் பையும், பாஜகவினரிடையே சலசலப்பையும் ஏற்படுத் தியது.

இந்த நிலையில் மேத்தா மீது காவல்துறையினர் பாலி யல் கொடுமை உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...