Monday, January 27, 2020

வனுவாட்டு தீவில் வங்கி கணக்கு சாமியார் நித்யானந்தா ரகசியம் அம்பலம்


சர்ச் சைக்குரிய சாமியார் நித்யா னந்தா, பசிபிக் பெருங்கடலில் அமைந்து உள்ள, வனுவாட்டு தீவு நாட்டின் தேசிய வங்கியில், கணக்கு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
சாமியார் நித்யானந்தா மீது, ஆள்கடத்தல், பாலியல் பலாத் காரம், சிறுவர்களை சித்ரவதை செய்தது என பல புகார்கள், குஜராத் மற்றும் கருநாடக மாநிலங்களில் உள்ளன.
இதையடுத்து, நித்யானந்தாவை கைது செய்யும் நடவடிக்கையில், குஜராத் காவல்துறையினர் இறங்கினர். எனினும், நித்யானந்தா, இந்தியாவில் இருந்து தப்பி தலை மறைவானார். அவர், ஈக்வடார் நாட்டில் பதுங்கி இருப்பதாக, தகவல் கிடைத்தது. எனினும், அதனை அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது.
இதையடுத்து, நித்யானந்தாவை கண்டுபிடிக்க, பன்னாட்டு காவல்துறை அமைப்பான, இன்டர்போல், 'புளூ கார்னர் தாக்கீதை' பிறப்பித்தது.
இதற்கிடையே, நித்யானந்தா எங்கு இருந்தாலும் கைது செய்வதற்கான, 'ரெட் கார்னர்' தாக்கீதை பிறப்பிக்க, தேவையான முயற்சிகளை, கருநாடக காவல்துறை எடுத்து வருகிறது. இந்நிலையில், நித்யானந்தா குறித்த சில தகவல்கள், தற்போது கிடைத்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் இருந்து, 1,750 கி.மீ., தொலைவில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு, வனுவாட்டு. இந்நாட்டில் உள்ள தேசிய வங்கியில், நித்யானந்தா, வங்கிக் கணக்கு வைத்துள்ளது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறப்பு பூஜை செய்ததற்கு கட்டணம் செலுத்துமாறு, நித்யானந்தா தரப்பில், ஒருவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், வனுவாட்டு தேசிய வங்கியின் தகவல்கள் குறிப்பிடப்பட்டி ருந்தன. அதன்மூலம், வனுவாட்டு தலைநகர் போர்ட் வில்லாவில் உள்ள வங்கிக் கிளையில், அவர் கணக்கு வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உலகில், கார்ப்பரேட் வரி, வருமான வரி என, எந்த வரிகளும் இல்லாத நாடுகளில், வனுவாட்டு நாடும் ஒன்று. அங்குள்ள வங்கியில், கணக்கு தொடங்கும் நபர்களின் தகவல்களும் பத்திரமாக பாதுகாக்கப்படும். இப்படி, பல வசதிகள் உள்ளதால், நித்யானந்தா, அங்குள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...