Friday, January 24, 2020

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் திட்டம்


கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளை தயாரிக்கும் திட்டத்தை சென்னை அய்அய்டி விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.
வாகனப் புகையிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு காற்று மாசுவின் அளவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக கார்பன் டை ஆக்சைடு வெளியாகாத வகையில் எரிபொருளை தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சோதனைகளை நடத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சூரிய சக்தி மூலம் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளை தயாரித்து சாதனை படைத்தனர்.
ஹைட்ரஜன் எரிபொருளின் உற்பத்தி செலவு குறைவாக இருந்தாலும், அது எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்ப தால் வாகனங்களில் பொருத்துவது மற்றும் சேமித்து வைப்பதில் சில பாதகமான விஷயங்கள் உள்ளன. எனினும், அதனை மிகவும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக் கும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்டன. இந்நிலையில், சென்னை அய்அய்டி விஞ்ஞானிகளும் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் சாதனையை எட்டியுள்ளனர்.
கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரி பொருளை பயன்படுத்தும்போது அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவதில்லை. இதனால் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த எரிபொருளை சேமித்து வைக்க தேவையில்லை. நமது தேவைக்கு ஏற்ப தயாரித்துக்கொள்ளலாம். இதனால், பாதுகாப்பு மட்டு மல்லாமல் எரிபொருளை கொண்டு செல்வதற்கான செல வும் ஏற்படாது. கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் செல வும் குறைவு. இந்த ஹைட்ரஜன் எரிபொருளை கார் போன்ற வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் விமான போக்கு வரத்திற்கும் பயன்படுத்தலாம் என்று சென்னை அய்அய்டி விஞ்ஞானி மாலிக் தெரிவித்துள்ளார்.
மேலும், கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை ராக்கெட்டுகளை ஏவுவதற்கும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தில் பயன்படுத்துவதே எங்களின் எதிர்கால திட்டம். அந்த நாளை எதிர்பார்த் துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஹைட்ரஜன் எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத் துவது தொடர்பான ஆய்வுகளும் முடிவடைந்துள்ளன. தற்போது ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் திட்டத்தை மேம்படுத்தி வருகிறோம் என்றும் அய்அய்டி விஞ்ஞானிகள் கூறினர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...