Friday, January 24, 2020

மின்சாரத்தை நுகராத "குளிர்பதனப் பெட்டி!"

மின் தட்டுப்பாடு உள்ள வெப்ப நாடுகளில், உணவுப் பொருட்களை பாதுகாக்க குளிர் பதனப் பெட்டிகளை பயன்படுத்துவதில் சிக்கல் உண்டு. கடைகளில் வெகு நேரம் மின்சாரம் இல்லாவிட்டால், பெட்டியிலுள்ள உணவுப் பொருட்கள் கெட்டு விடும்.
இதற்கு, நெதர்லாந்தைச் சேர்ந்த, 'கூல் இன்பினிடி' தற்போது, 'அய்ஸ் வோர்ட் 300' என்ற புதிய குளிர் பதனப் பெட்டியை உருவாக்கியுள்ளது.
இதற்கு, ஆறு மணி நேரம் மின்சாரம் இருந்தால் போதும். அந்த நேரத்திற்குள், பெட்டியைச் சுற்றி நிரப்பப்பட்டுள்ள சாதாரண நீரை அய்ஸ் கட்டிகளாக மாற்றி விடும்.
பிறகு மின்சாரம் இல்லா விட்டாலும், அடுத்த, 48 மணி நேரத்திற்கு, பெட்டிக்குள் உள்ள உணவுகளை, 6 டிகிரிக்கும் குறைவான குளிர்ச்சியில் வைத்திருக்கும்.
ஆசிய நாடுகளில் அய்ஸ் கட்டிகளை வெளியில் வாங்கி வந்து, தெர்மாகோல் பெட்டிகளில் கொட்டி, அதில் நேரடி யாகவே உணவுப் பொருட்களை புதைத்து வைப்பர். அதைவிட, 'அய்ஸ் வோர்ட் 300' பெட்டியில், நல்ல குளிர்ச்சியை கூடுதல் நேரத்திற்கு பெற முடியும் என்கின்றனர், அதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...