Tuesday, January 28, 2020

ஆன்டிபயாட்டிக் ஆபத்து; குழந்தைகள் ஜாக்கிரதை!


ஆன்டிபயாட்டிக் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில். மேலும் இது போன்ற ஆன்டிபயாட்டிக் எடுப்பதன் மூலம் ஆஸ்துமா, உணவு சம்மந்தப்பட்ட ஒவ்வாமை, சரும பிரச்சினை, சுவாசப் பிரச்சினை மற்றம் கண்பார்வையிலும் பிரச்னை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாகவே நாம் சாதாரண ஜுரம் மற்றும் சளி பிரச்சினை இருந்தாலே ஆன்டிபயாட்டிக் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இதனை நாம் எவ்வாறு சாப்பிடவேண்டும்.
மேலும் அதற்கான வழிமுறைகள் என்ன என்று விளக்கம் அளிக்கிறார் ஜெம் மருத்துவ மனையின் அனஸ்தியோலாஜிஸ்ட் மற்றும் இன்டர்வெஸ்ட் நிபுணர்  டாக்டர் வான்மதி. ஆன்டிபயாட்டிக் என்பது நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்கும் மருந்து. ஆனால் நாம் இதனை ரொம்பவே தேவையில்லாமல் பயன் படுத்திக் கொண்டு இருக்கிறோம். நுண்ணுயிர் தாக்கம் என்பது நம்முடைய உடலில் ஏற்படும் சாதாரண ஜுரம் மற்றும் சளியின் தாக்கம். இந்த இரண்டு பிரச்சினைக்கும் சரியான மருந்து எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் சரியாகிவிடும். சில சமயம் நாம் சளிக்கு அவசியம் மருந்து எடுப்பதில்லை. அந்த தருணங்களில் அவற்றின் தாக்கம் இரண்டு நாட்கள் கூடுதலாக இருக்கும். பிறகு சரியாகிவிடும்.
காரணம் இது போன்ற சாதாரண பிரச்சினை களுக்கு நம் உடலில் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உள்ளது. எதிர்ப்பு சக்தி உயிரணுக்கள் நம் உடலில் ஏற்படும் பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமியின் தாக்கத்தை எதிர்த்து போராடி அதனை அழிக்கும் வல்லமை கொண்டுள்ளது. ஆனால், நம்மில் இந்த ஒரு வார பிரச்சினையை தாங்கும் பொறுமை யாருக்கும் இல்லை என்று தான் சொல்லணும். நம்முடைய உடலுக்கு எது வந்தாலும் உடனடியாக சரியாக வேண்டும் என்நு தான் நாம் பார்க்கிறோம்.
இதனால் பெரும்பாலானவர்கள் டாக்டரிடம் செல்லும் போதே, உடனடியா குணமாக வேண்டும் என்று வற்புறுத்துவதால், அவர்களும் அதற்கான அதிக அளவு டோசேஜ் மாத்திரையினை தருகிறார்கள். இதில் ஆன்டிபயாட்டிக்கும் அடங்கும். சாதாரணமான காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அதற்கு பெரிய அளவில் ஆன்டிபயாட்டிக் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் கொடுக்கும் சாதாரண மருந்துகளிலேயே குணமாகிவிடும். ஆனால் என்ன ஒரு வாரம் இதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும். காரணம் இவை எல்லாம் வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற கிருமியின் தாக்கத்தினால் தான் ஏற்படுகிறது. இவை இரண்டுமே ஒரு வகையான நுண்ணுயிர்கள் தான். கண்ணுக்கு தெரியாத கிருமிகள். அதனால் சாதாரண தும்மல் இருந்தாலே காய்ச்சல் வருவது போல் இருக்கும். அவை இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் சில சமயம் நாம் என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும், சளி அதிகமாக கட்டிக் கொண்டு இருக்கும். அந்த சமயம் அவை பாக்டீரியாவின் தொற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் சைல்ட் காய்ச்சல் மற்றும் சளிக்கு நாம் ஆன்டி பயாட்டிக் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
ஆனால் இதுவே நான் சொன்னது போல் அதிக அளவு சளி கட்டிக் கொண்டு இருந்தால், அது பாக்டீரியா தொற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளலாம். ஆன்டிபயாட்டிக் என் பது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் கிருமிகளை குணப்படுத்த முடியாமல் போகும் போது அந்த சமயத்தில் கிருமிகளுடன் எதிர்த்து போராடி அதனை அழிக்க உதவக்கூடியது. எந்த ஒரு பிரச்னையும் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் கொடுக்க வேண்டும். அதாவது காய்ச்சல் மூன்று நாட் களுக்கு மேல் நீடிக்கும் போது அது குறித்து ஆய்வு எடுப்பது வழக்கம். அதில் டைபாய்ட், டெங்கு போன்ற பிரச்னையை கண்டறிந்தால் மட்டுமே ஆன்டி பயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கும். இது சாதாரண பிரச்னையாக இருக்கும் பட்சத்தில் ஆன்டி பயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...