Sunday, January 26, 2020

சிறு-குறு-நடுத்தர தொழில்முனைவோருக்கு இந்தியன் வங்கி ரூ.1,800 கோடி கடனுதவி

இந்தியன் வங்கி நிகழ் நிதியாண்டில் கடந்த டிச.31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிகர லாபமாக ரூ.247 கோடியை ஈட்டியுள்ளது.
இது தொடார்பாக சென் னையில் 24.1.2020 அன்று நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் வங்கியின் நிதிநிலை அறிக்கையை அதன் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு வெளியிட்டார். இதை யடுத்து அவர் செய்தியாளர்க ளிடம் கூறியது:
இந்தியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 4 லட் சத்து 50,278 கோடி ஆகும். இது கடந்த ஆண்டைக் காட் டிலும் 12 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. நிகழ் நிதியாண் டின் மூன்றாவது காலாண்டு மொத்த வருமானம் ரூ.6,505.62 கோடியாகும். கடந்த ஆண் டின் இதே கால கட்டத்தில் ரூ.5,269.10 கோடி ஆக இருந் தது. நிகர லாபம் கடந்த ஆண் டைக் காட்டிலும் (ரூ.152.26 கோடி) 62.3 சதவீதம் அதிக ரித்து தற்போது ரூ.247.16 கோடியாக உயர்ந்துள்ளது.
வட்டி மூலம் கிடைக்கக் கூடிய நிகர வருவாய் கடந்த ஆண்டில் ரூ.15,530 கோடி யாக இருந்தது. இது நிக ழாண்டு ரூ. 18,383 கோடியாக அதிகரித்துள்ளது. வாடிக்கை யாளர்களிட மிருந்து பெறப் படும் மொத்த டெபாசிட் தொகை ரூ.2 லட்சத்து 57,621 கோடி ஆகும். இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 12 சதவீதம் வளர்ச்சி பெற்றுள் ளது. வங்கியின் மூலம் ரூ.1 லட்சத்து 92,658 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 76,864 கோடி ஆக இருந்தது. வாராக்கடன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. நீண்ட கால திரும்பச் செலுத்தும் கடனாக 47 ஆயி ரம் சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு ரூ.1,800 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி-அலகா பாத் வங்கி இணைப்பு விரை வில் நடைபெறும். இதன் மூலம் வட இந்தியாவில் இந்தியன் வங்கியின் வர்த்தகம் விரிவ டையும் என்றார் நிர்வாக இயக்குநர் பத்மஜா சந்துரு.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...