Wednesday, November 20, 2019

சேவை கட்டணங்களை உயர்த்துகிறது ஜியோ!

பார்தி ஏர்டெல், வோடஃபோன் அய்டியா நிறுவனங்களைத் தொடர்ந்து செல்லிடப்பேசி சேவை கட்டணங்களை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித் துள்ளது. கடந்த 3 ஆண்டு களாக ஜியோ அறிவித்த அதி ரடி சலுகைகளால் ஏராள மான வாடிக்கையாளர்க ளைப் பெற்றது.
இந்நிலையில், கடன் சுமை காரணமாக டிசம்பர் 1-ஆம் தேதி முதல் செல் லிடப்பேசி கட்டணங்களை உயர்த்துவதாக வோட ஃபோன் அய்டியா, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து தற்போது ஜியோவும் இதே காரணத்துக்காக செல்லிடப் பேசி கட்டணத்தை உயர்த்து வதாக அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறை வர்த்தகத்தை ஊக்கு விக்க இதர நிறுவனங்கள் போன்று தாங்களும் அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு சேவை கட்டணத்தை உயர்த் துவதாக ஜியோ விளக்கமளித் துள்ளது. இருப்பினும் இந்த கட்டண உயர்வு வாடிக் கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகை யில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த கட் டண உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்நிறு வனங்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
வோடஃபோன் நிறுவ னம் கடந்த வாரம் வெளியிட்ட 2-ஆம் காலாண்டுக் கான நிதி நிலை அறிக்கையில் ரூ.50,921 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது. அதே போன்று, பார்தி ஏர்டெல் நிறுவனமும் 2-ஆம் காலாண் டில் ரூ.23,045 கோடி இழப்பை சந்தித்ததாக கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...