Friday, July 26, 2019

வளர்விகித ரயில் கட்டண முறையை கைவிடும் எண்ணம் இல்லை: மக்களவையில் தகவல்

நாடு முழுவதும் 13,452 ரயில்களில் 141 ரயில்களில் மட்டுமே வளர்விகித கட்டண முறை அமலில் உள்ளது; இத்திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அந்த அவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதில்: 141 ரயில்களில் 32 ரயில்களில் மட்டும் 9 மாதங்களுக்கு வளர்விகித கட்டண முறை அமலில் இருக்கும். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த ஜூன் மாதம் வரை ரூ.2,426 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப் பட்டது.  ரயில், விமானப் போக்குவரத்து ஆகிய இரண்டும் வசதிகள் உள்ளிட்ட பலவிதங்களில் வேறுபட்டவை. ரயில்களில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விமானங்களுக்கு அதிகபட்ச கட்டணம் நிர்ண யம் செய்யப்படவில்லை. ஆனால், விமானங்களுக்கு நேரத்துக்கு ஏற்பட கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ள உரிமை இருக்கிறது.
விமானங்களைக் காட்டிலும் ரயில் கட்டணம் அதிகம் வசூலிக்கப் படுவதில்லை. ரயில்களில் வகுப்பு வாரியாக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. மக்கள் எதில் பயணிக்க விரும்புகிறார்களோ அதில் பயணிக்க லாம். வளர்விகித கட்டணம் இல்லாத 2015-_2016 காலகட்டத்தில் 101.15 சதவீத முன்பதிவு இருந்தது. புதிய முறை அமல்படுத்தப்பட்ட பிறகு 2017_-2018 காலகட்டத்தில் 105.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களில் வளர்விகித கட்டணத்தின் கீழ் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...