Monday, July 29, 2019

சமுகநீதியின் மீது மேலும் மேலும் தாக்குதல் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விஞ்ஞானிகளின் பிரதிநிதித்துவம் வீழ்ச்சி!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் DBT (Department of Biotechnology)  எனப்படும் உயிரித் தொழில்நுட்பத் துறையால் நிதி அளிக்கப்படும் அறிவியல் நிறுவனங்களில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டிருக்கும் எண் ணிக்கை இட ஒதுக்கீடு விதியின்படி இருக்கவேண்டிய எண்ணிக்கையைவிட மிகவும் குறைவாக உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆய்வாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தகவல் கிடைத்துள்ளது.
அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை பல அறிவியல் நிறுவனங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15 %,  பழங்குடியினருக்கு 7.5%  என்பதாக மட்டுமே அதிகபட்சமாக வழங்குகின்றன. எனினும் 'தி இந்து' ஆங்கில ஏடு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை ஆராய்ந்ததில் இட ஒதுக்கீடு விதியின்படி பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டிய கட்டாயமில்லாத விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்ப தர ஊழியர் பதவிகள் இட ஒதுக்கீடு பெறும் வகுப்பினர்களுக்கு (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தவிர்த்து) வெறும் ஒற்றை இலக்க அளவிலேயே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
208க்கு வெறும் 34
எடுத்துக்காட்டாக,  DBTயின் நிதி பெற்று இயங் கும் தேசிய நோயெதிர்ப்பியல் நிறுவனத்தில் National Institute of Immunology (NII) மொத்தமுள்ள 208 நிரந்தர பணியாளர்களில் வெறும் 34 நபர் களேதாழ்த்தப்பட்ட/பழங்குடியின  வகுப்பை சார்ந் தவர்கள். அதிலும் தாழ்த்தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் (Scientists)  வெறும் 2 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். (ஊதிய தர நிலையில் 10 மற்றும் அதற்கும் மேலாக உள்ள குரூப்  விஞ்ஞானிகள் பதவிகளுக்கு பொருந்தாது) மேலும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கூட அங்கு இடம் பெறவில்லை. யுனெஸ்கோ அமைப்பின் நிதி ஆதரவில் இயங்கும் மற்றொரு  நிறுவனமான உயிரித் தொழில்நுட்பப் பிராந்திய மய்யத்தில்  உள்ள 44 நிரந்தர பணியாளர்களில் வெறும் நான்கு நபர் மட்டுமே பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள். விஞ்ஞானி நிலையில் ஒருவர் கூட இல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும்  பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் விஞ்ஞானி நிலையில் பூனாவை தலைமையிடமாகக் கொண்ட செல் அறிவியல் மய்யத்தில் தான் அதிகளவில் பிரதிநிதித்துவம் பெற் றுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) பிரிவில் அய்ந்து நபர்களும், பழங்குடியின வகுப்பினர் (ST) பிரிவில் இருவர் என்ற எண்ணிக்கையிலும் உள்ளனர்.
தகவல் அளிக்காத நிறுவனங்கள்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  DBT
நிறுவனங்களில் விஞ்ஞானிகளின் பிரதிநிதித்துவம் தொடர்பாக 16 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்திற்கு ஒன்பது நிறுவனங்களே பதில் அளித்திருக்கின்றன என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மனுதாரர் அசோக் குமார் தெரிவித்தார். குமார் ஃபரிதாபாத் நகரில் உள்ள உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற Translational Health Science Institute (THSI)  நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அந்நிறுவனத்திலும் மொத்தமுள்ள 32 நிரந்தர பணியாளர்களில் இருவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட/பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், அதிலும் ஒருவர் மட்டுமே விஞ்ஞானி நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
மேலும், 'தி இந்து' நாளிதழின் கேள்விகளுக்கு பதிலளித்த  DBT  நிறுவனத்தின் செயலாளர் ரேனு சுவரூப் கடந்த ஆண்டே இப்பிரச்சினையை கருத்தில் கொண்டு அதற்கான தீர்வையும் மேற் கொண்டுவிட்டதாக தெரிவித்தார். "சில நிறுவனங் களில் தான் இவ்வகையான பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. தற்பொழுது  இப்பிரச்சினைகளை களையும் விதத்தில் தீர்வைக் கண்டுள்ளோம். அதன்படியே இவ்வாண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனமும் நடைபெற்றது. எனினும் பணி நியமனத்தில் பணியாளர் தேவை, தகுதி,திறமை போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படு கிறது" என கூறினார்.
மத்திய பல்கலைக் கழகங்களில்...
டிசம்பர் 2018இல் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய அரசு, மத்திய பல்கலைக்கழகங்களில் மொத்தமுள்ள 936 பேரா சிரியர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட /பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் 193 நபர் பணிய மர்த்தப்பட்டுள்ளனர் என்றும், 1838 உதவி பேரா சிரியர் பணியிடங்களில் 395 நபர் பணியமர்த்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...