Sunday, July 28, 2019

மேலும் 25 விமான நிலையங்கள் தனியார்மயமாம்! விமான நிலைய ஆணையம் தகவல்

ஏற்கெனவே 6 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 முதல் 25 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணை யத்தின் தலைவர் குருபிரசாத் மோகபாத்ரா தெரிவித் துள்ளார்.
கடந்த ஆண்டில் லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது.  அவற்றில் 5 விமான நிலையங்களின் பராமரிப்பு, நிர்வாக ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றது.
இந்நிலையில், டில்லியில் வெள்ளிக்கிழமை செய்தி யாளர்களைச் சந்தித்த குருபிரசாத் இது தொடர்பாக கூறுகையில், கடந்த ஆண்டு 6 விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆண்டில் மேலும் 20 முதல் 25 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும். இவை 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பயணிகள் வந்து செல்லும் பெரிய விமான நிலையங்களாக இருக்கும் என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...