Friday, June 28, 2019

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் செலுத்துவது குறைந்துள்ளது சுவிஸ் தேசிய வங்கி தகவல்

சுவிட்சர் லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய் வது கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 6 சதவீதம் குறைந் துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்தது.

இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

இந்தியாவில் உள்ள சுவிட் சர்லாந்து வங்கிக் கிளைகளில் பணம் சேமிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
சுவிட்சர்லாந்து வங்கி களில் இந்தியர்கள் பணம் சேமிப்பது குறைவது கடந்த 20 ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டில் மட்டும் 6 சதவீதம் குறைந்ததால், சுவிஸ் வங்கிகளுக்கு ரூ.6,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக வெளி நாட்டவர்களின் சேமிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு 4 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், ரூ.99 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய வாடிக்கையா ளர் கள், வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை கணக்கில் எடுத் துக்  கொள்ளப்பட்டன.
தனிநபர்கள், வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சுவிஸ் வங்கிகள் திருப்பித் தர வேண்டிய தொகையும் கணக் கில் எடுத்துக் கொள்ளப்பட் டன.
இந்திய வாடிக்கையாளர் களுக்குத் தர வேண்டிய ரொக்கம் கடந்த 2017ஆம் ஆண்டில் 50 சதவீதம் அதி கரித்தது.
2006ஆம் ஆண்டு முடி வில், சுவிஸ் வங்கிகளில் இந் தியர்கள் சேமித்து வைத்த பணம் ரூ.23,000 கோடியாக இருந்தது. இதுவே அதிகபட் சமாகும். அதன்பிறகு, 2011 ஆம் ஆண்டில் 12 சதவீதமும், 2013ஆம் ஆண்டில் 43 சதவீத மும் அதிகரித்தது.
கடந்த ஆண்டு முடிவில் மொத்தமுள்ள 248 வங்கி களில் 216 வங்கிகள் லாப மடைந்தன. 32 வங்கிகள் நஷ்டமடைந்தன என்று சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
கருப்புப் பணம் தொடர் பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சுவிட்சர்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது. அது கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து, சில தகவல்களை வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு முதல் முறையாக  வரும் செப்டம்பர் மாதம் சுவிஸ் அரசு பகிர்ந்து கொள்ள உள்ளது. இதன் பிறகு, ஆண்டுதோறும் கருப் புப் பணம் தொடர்பான தக வல்கள் பகிர்ந்துகொள்ளப் படும்.
இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த தகவல்கள் எதுவும் இந்த அறிக்கையில் குறிப்பி டப்படவில்லை.
பல்வேறு நாடுகளிலிருந்து நிறுவனங்களின் பெயர்களில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர் களும், வெளிநாடு வாழ் இந் தியர்களும் சேமித்து வைத் திருக்கும் பணம் குறித்த தகவலும் சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...