Friday, June 28, 2019

அவாளின் எண்ணம்

குருமூர்த்தி துக்ளக்கில் எழுதும் தலையங்கம், கேள்வி - பதில் எல்லாவற்றிலும் மீண்டும்,மீண்டும் வலியுறுத்துவது இது தான்; "அடேய் அதிமுக பயலுகளே.., ஒத்துமையாக இருங்கடா...ஒங்க கிட்ட ஒத்துமை இல்லாவிட்டால் திமுக வந்துடும்..! அய்யோ...! அப்புறம் எங்க  நிலைமை என்னாவது..?"
ஆயினும், "அதிமுகவினர் ஒற்றுமையாக இல்லாவிட்டால் என்னாவது...?"  என்ற பயமும் இந்த அம்பிகளை ஆட்டிப் படைக்கிறது.
சமீபத்திய துக்ளக்கில் ஒரு கேள்வியையும், பதிலையும் கவனியுங்கள்.
அதிமுகவின் ஒற்றை தலைமையை ஒரு வேளை ரஜினி ஏற்றால், அதிமுக பலப்பட வாய்ப்புள்ளதா?
அதிமுக தலைவர்களை ஜெயலலிதா ஒருமுகமாக போக வைத்து கட்டி மேய்த்தார்..! அதில் யாராவது ஒருவர் தலைவராக வேண்டும், மற்றவர்கள் மந்தையாக அவர் பின்னால் செல்ல வேண்டும்  என்பது இன்றைய நடைமுறைக்கு உதவாது....இதை அதிமுகவினர் புரிந்து கொண்டு, சென்ற வாரம் நாம் தலையங்கத்தில் கூறியது போல,கூட்டுத் தலைமை கலாச்சாரத்தை கொண்டு வந்தால், அதிமுக வலுவடையும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
திமுக இருக்கும் வரை அதை எதிர்க்க அதிமுக என்ற கட்சி அவசியம். அதை அதிமுக சரிவர செய்யவில்லை  என்றால், அது ஏதாவது ஒரு வகையில் மறு அவதாரம் எடுக்கும். அதன் மறு அவதாரம் திமுக எதிர்ப்பு சக்திகளை ஒன்று சேர்க்கும். அதன் தலைவராக ரஜினி வரும் வாய்ப்பும் இருக்கிறது என்பது நமது கணிப்பு.
இந்த பதிலில் இருந்து, இந்த அம்பிகள்  ஏன் ரஜினியை அரசியலுக்கு இழுக்கிறார்கள் என்பதும், அது, திமுகவை எதிர்ப்பதற்காகவே அவரை அரசியலுக்குள் இழுத்துக் கொண்டு வரத் துடிக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.
அதாவது, இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் சொன்னது போல, இவர்களின் ஒரே மய்யபுள்ளி என்பது, ஒரு அரசியல் கட்சி யோக்கியமானதா? இல்லையா? என்பதை விடவும்,  அது பார்ப்பனிய ஆதிக்கத்தை கேள்வியில்லாமல் ஏற்றுக் கொள்ளும் தலைமையா? இல்லையா என்பதே! அந்த ஒரே மதிப்பீட்டில் தான் இருக்கும் இரு திராவிடக் கட்சிகளில், ஊழலில் ஓங்கி உயர்ந்து,  நாறிக் குமட்டும் கட்சியான அதிமுகவின்  ஆட்சியை தூக்கிச் சுமக்கிறார்கள்!
அத்துடன், கிருஷ்ணனின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத் திற்காகத்  தான் தாங்கள் நாளும் காத்திருப்பதாகச் சொல்லி வந்த இந்த அம்பிகள், இன்று அதிமுகவின் மறு அவதாரத்திற்காக காத்திருக்கும் நிலைமைக்கு இவர்களை திமுக அச்சமும், துவேஷமும் கொண்டு நிறுத்தியிருக்கிறதே..., என்று நினைத்தால், பரிதாபப் படுவதைத் தவிர, எனக்கு ஒன்றும் தோன்றவில்லை!

- சாவித்திரி கண்ணன்
பத்திரிகையாளர்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...