Tuesday, June 25, 2019

'துக்ளக்' ஏட்டிற்கு கடும் எச்சரிக்கை!

இன்று காலை வெளிவந்துள்ள குருமூர்த்தி அய்யர் அண்ட் கோவின் 'துக்ளக்' ஏட்டில், கீழ்க்காணும் ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
"நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் "பெரியார் வாழ்க" என்று கோஷ மிட்டுள்ளனர். தவிர, திமுக தரப்பில் இருந்து சமீப காலமாக, இது பெரியார் மண், திராவிட பூமி என்று கீறல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டு மாதிரி திரும்பத் திரும்ப குரல்கள் ஒலிக்கின்றன. இதற்குப் பதில் தரும் விதமாக பா.ஜ.க. தரப்பில் இருந்து ஓரிருவர், பெரியார் பற்றி திமுக ஆரம்ப காலத்தில் செய்த விமர் சனங்கள், தலித்துக்கள் பற்றிய பெரியாரின் பார்வை - ஆகியவற்றை மேற்கோள் காட்டி, ஊடக விவாதங் களில் கருத்துக்களை முன் வைக்கத் துவங்கியுள்ளனர். இந்த வகையில் பெரியாரின் 'மறுபக்கம்' வெளிப்படுவது வரவேற்புக்குரியதே" - இதுதான் குரு மூர்த்தி அவர்களின் விஷ உருண்டை!
"தந்தை பெரியார் எப்போதும் ஓடும் வற்றாத லட்சிய ஜீவநதி"; அது உங்கள் "புனித(?) கங்கையைப்" போல தூய்மைப் படுத்த பல்லாயிரக்கணக் கான கோடி மக்கள் வரிப் பணத்தை நாசமாக்க  வேண்டியது அல்ல!
அட, நானே அறிவாளி வகையறாரே,
பாதை இல்லாத ஊருக்கெல்லாம் ஈரோட்டுப் பாதை போட்டு மானமும், அறிவும் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மக்களுக்கு அதை மீட்டுத் தந்த போர்த் தலைவர் - தந்தை பெரியார். காற்றை விதைத்து, புயலை அறுவடை செய்யப் போகிறீர்கள்.
இனமான இறுதிப் போர் இப்போது - அதுவும் அறப்போர்; அறிவுப் போர்!
அந்த வகையில் நீங்கள் எவ்வளவு "சிண்டு முடித்தனம்", சீலமற்ற சிறுமை நிறைந்த கயமைத்தனத்தை - உங்கள் கூட்டம் முதல் கட்டவிழ்த்து விட்டால் அது ஆரிய - திராவிடப் போர் என்ற பண்பாட்டு உரிமைப் போருக்குப் புதிய ஆயுதங்களை எங்களுக்கு வழங்கிய தாகவே பொருள்!
ஆழந் தெரியாமல் காலை விட்டு, அந்த  நதியைத் தடுக்கிறோம் என்று அசட்டுத்தனத்தோடும், அறியாமை கலந்த ஆணவத்தோடும் இறங்கினால்,  அந்த உணர்ச்சி வெள்ளம் உங்களை அடித்துச் செல்லும் என்பது புரியும்.
பல முக்கிய பார்ப்பனரின், பா.ஜ.க. போற்றும் ஒப்பனை வீரர்களின் முகமூடியைக் கழற்றி, உண்மை முகம் காட்டிட நமக்கு அது உதவியதாகவே அமையும். எதிர்கொள்ள, பதிலடி தர, தயாராக காத்திருக்கிறோம் - காத்திருக் கிறோம்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...