Tuesday, May 14, 2019

டில்லியில் மத்திய அரசின் பி.எட். கல்வி நிறுவனத்தில் தமிழுக்கான பாடப்பிரிவு இந்த ஆண்டும் திறக்கப்படாத அவலம்: தமிழக அரசு கவனிக்குமா?

டில்லியின் சத்ரா மார்கிலுள்ள மிராண்டா கல் லூரிக்கு அருகில் மத்திய அரசின் ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
1947இ-ல் டில்லி பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம், உருது, இந்தி, சமஸ்கிருதம் போன்ற பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டன. பிறகு, தமிழ், பஞ்சாபி, பெங் காலியும் சேர்க்கப்பட்டன.
தமிழுக்காக ஒவ்வொரு ஆண்டும் பொது நுழைவுத் தேர்வின் அடிப் படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதற்கான நுழைவுத்தேர்வில் மாணவர்கள் தகுதி பெறுவதில்லை எனதமிழ் மொழிக்கான கல்வியியல்பிரிவு கடந்த 2016 ஆம் ஆண்டு மூடப்பட் டது. தமிழுக்கான ஒதுக்கீடு, வேறு பாடப்பிரிவுகளுக்கும் மாற்றப் பட்டிருந்தது.
இதுதொடர்பான தகவல் பிப் ரவரி 19இ-ல் வெளியானது. இதன் தாக்கமாக தமிழுக்கானப் பாடப்பிரிவைத் துவக்க டில்லியின் பல்வேறு தமிழ் அமைப்புகள் அக்கல்வி நிறு வனத்திடம் வலியுறுத்தின. இதை ஏற்று மீண்டும் துவக்குவதாக இருந்த தமிழ் பாடப்பிரிவுக்கு இந்த ஆண்டும் மூடியுள்ள நிலையே தொடர்கிறது.
இது குறித்து அக்கல்வியியல் நிறுவன வட்டாரம் கூறும்போது,
‘‘இதுபோல், தமிழுடன் பெங் காலி மொழி பாடப்பிரிவுகள் இரண் டாம் முறையாக மூடப்பட்டுள்ளன ஆனால், இது அங்கு பணியாற்றும் சில பேராசிரியர்களின் உள்நோக் கத்துடனான முடிவே தவிர, மத்திய அரசின் முடிவல்ல. இதனால், டில்லியில் வருடந்தோறும் தமிழில் பட்டம் பெறும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள்’’ எனத் தெரிவித்தன.
புதிய கல்வியாண்டுக்கு விளம்பரம் வெளியிடுவது வழக்கம். அதற்கு முன்பாக அக்கல்வி நிறுவ னத்தின் ஆசிரியர்களுக்காக ஒரு சுற்றறிக்கை அளிக்கப்படும். இதில் ஆசிரியர்கள் திருத்தம் தெரிவித்தால் அதை சரிசெய்து விளம்பரமாக அளிப்பார்கள். ஆனால், சில நாட் களுக்கு முன் அளிக்கப்பட்ட அந்த சுற்றறிக்கையில் பெரிதும் எதிர் பார்த்த தமிழ்பாடப்பிரிவு இடம்பெற வில்லை. இதை அங்கு வேறு பல துறைகளில் பணியாற்றும் தமிழர் களான பேராசிரியர்கள் எடுத்துக் கூறியும் அதில் மாற்றத்தை செய்ய அதன் நிர்வாகம் முன்வரவில்லை.
தமிழ்ப் பாடத்திற்கான முது நிலை கல்வியியலும் (எம்எட்) துவக்கப்படவில்லை என இங்கு புகார் உள்ளது. இதனால் டில்லியில் வாழும் தமிழர்கள் பிஎட் கல்விக் காகப் பல லட்சங்கள் செலவு செய்து தமிழகத்துக்கு செல்கின்றனர். இது மட்டுமல்லாமல், டில்லி பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்படும் மூன்று கல்லூரிகளில் இருந்த தமிழ்ப் பாடப் பிரிவுகளுக்கான ஆசிரியர்களும் அமர்த்தப்படாமல் உள்ளனர்.
15 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த நிலையால் தமிழ்த் துறைகள் மூடும் நிலையை எட்டியுள்ளன. எனவே, இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...