Thursday, May 30, 2019

பாஜக வுக்கு மாறினால் 50 கோடி பணம், அமைச்சர் பதவியாம் பி.எஸ்.பி சட்டமன்ற உறுப்பினர் புகார்

மக்களவை தேர்தல் பரபரப்புகள் குறைந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர் பாஜக பற்றி கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி யில் அங்கம் வகிக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. 231 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ், பகுஜன்சமாஜ், சமாஜ் வாடி கட்சி கள் கூட்டணியமைத்து ஆட்சியில் உள்ளன. 109 இடங்களை தனித்து கைப்பற்றிய பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க பாஜகவுக்கு இன் னும் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்நிலையில் பாஜக பணம் கொடுத்து சட்டமன்ற உறுப் பினர் களை விலைக்கு வாங்க பார்க்கிறது என பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமாபாய் குற்றம் சாட்டி யுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "அனைத்து எம். எல்.ஏக் களுடனும் பேசி ஆசை வார்த்தை காட்டுகின்றனர். ஆனால் முட் டாள்கள் தான் அவர்களது அணிக்கு செல்வார்கள். என்னை தொடர்பு கொண்ட அவர்கள் அமைச் சர் பதவியும், பணமும் தருவதாக கூறினர். 50 முதல் 60 கோடி ரூபாய் வரை பணம் தருவதாக கூறி வரு கின்றனர்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...