Monday, April 15, 2019

ரஃபேல்: தனி ஒருவராக பேரத்தில் ஈடுபட்ட மோடி


ஆங்கில நாளிதழில் வெளிவந்த ஆவணங்களின் படி தொடர்ந்து மத்திய பாதுகாப்புச் செயலகமும், இதர பாதுகாப்பு ஆலோசகர்களும் ரபேல் விமானம் வாங்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தனி ஒருவராக மோடியே இந்த ஒப்பந்தத்தை போட்டுள்ளது அம்பல மாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் 2018 டிசம்பர் மாதம் ரஃபேல் பேர ஒப்பந்தம் தொடர்பாக வெளியிட்ட தீர்ப்பின் மறுபரி சீலனை மனுக்களை தற்போது மனுதாரர்கள் தாக்கல் செய்யலாம், அதன் படி விசாரணை நடைபெறும் என்று தீர்ப்பு கூறியிருந்தது.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்ற ரஃபேல் பேர ஒப்பந்த விசாரணையில், சட்டத்திற்கு புறம்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் உச்ச நீதி மன்றம் தீவிரமாக விசாரணை செய்யும் என்று தீர்ப் பளித்தது. பின்னர் மறு பரிசீலனை மனுக்களை ஏற்பது தொடர்பாகவும் தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் ஆவணங்கள் தொடர்பான விசாரணை யில், இந்து நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை பரி சீலனை செய்யக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக் கையை நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் வரக்கூடாது என்று மத்திய அரசு விரும்பிய அந்த மூன்று ஆவணங்கள் என்னென்ன?
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி, 2015ஆம் ஆண்டு எழுதிய முக்கிய குறிப்பு. அதில் பிரதமர் அலுவலகம் சார்பில், பாது காப்புத்துறை அமைச்சராக இருந்த மறைந்த மனோகர் பரிக்கருக்கு எழுதப்பட்டதாகும். பாதுகாப்புத் துறை செயலாளர் ஜி.மோகன் குமார் பாதுகாப்பு அமைச்சரின் பார்வைக்கு, இது போன்ற ஆலோ சனையை தவிர்ப்பதின் மூலம் நம்முடைய பேரம் பேசும் சுதந்திர தன்மையை முற்றிலும் பாதிப்பிற்குள் ளாக்கிவிட்டது பிரதமர் அலுவலகம் என்று எழுதி யுள்ளார்.
துணைச் செயலாளார் எஸ்.கே.சர்மா செயலாளர் மோகன் குமாருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய பேரம் பேசும் குழுவில் இல்லாதவர்கள் நேரடியாக, ஒரே நேரத்தில், பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேசுவதை தடுத்து நிறுத்துமாறு நாம் பிரதமர் அலுவலகத்தில் முறையிடுவோம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் நம்முடைய பேரக்குழுவில், எதிர்பார்ப்புகள் எட்டப்படாத பட்சத்தில் வேண்டுமானால் பிரதமர் அலுவலகம் இதில் தலையிட்டுக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரண்டு விண்ணப்பங்களுக்கும் பதில் கூறும் வகையில் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரதமர் அலுவலகமும், பிரான்ஸ் அதிகாரிகளும், நடைபெறும் பேரம் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வருவ தாக தெரிகிறது. அய்ந்தாவது பத்தி அளவுக்கதிகமான அர்த்தத்தை சுமந்து வருவது போல் இருக்கிறது. பாதுகாப்புத் துறை செயலாளர் இந்த பிரச்சினையை, பிரதமரின் உதவியாளரிடம்  பேசி சரி செய்வார். 5ஆவது பத்தி சர்மாவின் பார்வைக்கு என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய பேரம் பேசும் குழுவில் இடம் பெற்றிருந்த மூவர் தங்களின் மறுப்பு கடிதத்தை எழுதியுள்ளனர். ஜூன் 1, 2016 அன்று நடந்த நிகழ்வில் இந்த மறுப்பு அறிவிக்கப்பட்டது உறுதியானது. ஒரு குறிப்பிட்ட பேரத்தில் உள்ள 10 அம்சங்களை மறுத்துள்ளது இந்த மூவர் குழு என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு இணையாக, மோடியே நேரடியாக விலை மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அன்று செயல்பட்டது மற்றும் பேரக் குழுவில் தொடர்ந்தாற் போல் 10 அம்சங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது போன்றவை தற்போது அம்பலமாகியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...