Monday, April 15, 2019

கலைஞர் ஆட்சியில் தி.மு.க. சாதித்தது என்ன?

1.  போக்குவரத்துத் துறை என்ற துறையை உருவாக் கியது - கலைஞர்
2. போக்குவரத்தை தேசியமயமாக்கியது - கலைஞர்
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது - கலைஞர்
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது - கலைஞர்
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது - கலைஞர்
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது - கலைஞர்
7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது - கலைஞர்
8.  பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மய்யம் அமைத்தது -கலைஞர்
9.  கையில் இழுக்கும் ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது - கலைஞர்
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோ ருக்குக் கொடுக்கும் திட்டம் வகுத்தது - கலைஞர்
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன் றவை) கொண்டுவந்தது - கலைஞர்
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது - கலைஞர்
13.  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக் கென துறை அமைத்தது - கலைஞர்
14. அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை அமைத்தது - கலைஞர்
15.  அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடு - தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடு ஆக உயர்த்தியது - கலைஞர்
16.  பி.யு.சி. வரை இலவசக்கல்வி உருவாக்கியது - கலைஞர்
17.  மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது - கலைஞர்
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது - கலைஞர்
19.  முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது - கலைஞர்
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது - கலைஞர்
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது - கலைஞர்
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது - கலைஞர்
23.  கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம் தந்தது - கலைஞர்
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது - கலைஞர்
25.  நில விற்பனை வரையறை சட்டம் அமைத்தது - கலைஞர்
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின் உற்பத்தி நெய் வேலி கொண்டுவந்தது - கலைஞர்
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துக்குடி கொண்டுவந்தது - கலைஞர்
28. சிட்கோ உருவாக்கியது - கலைஞர்
29. சிப்காட் உருவாக்கியது - கலைஞர்
30. உருது பேசும் இசுலாமியர்களை பிற்படுத்தப்பட் டோரில் தமிழ் இசுலாமியர்கள் போல் சேர்த்தது - கலைஞர்
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தது  - கலைஞர்
32. மனு நீதி திட்டம் தந்தது - கலைஞர்
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது - கலைஞர்
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது - கலைஞர்
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட் டோரில் இணைத்தது - கலைஞர்
36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது - கலைஞர்
37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு தந்தது - கலைஞர்
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு தந்தது - கலைஞர்
39. பழங்குடியினருக்கு 1 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு தந்தது - கலைஞர்
40. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது - கலைஞர்
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இலவச கல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது - கலைஞர்
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது - கலைஞர்
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது - கலைஞர்
44.  சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது - கலைஞர்
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தது - கலைஞர்
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்தது  -கலைஞர்
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது - கலைஞர்
48.  வா:ழ்க்கைத் துணை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது  - கலைஞர்
49. நேரடி நெல் கொள்முதல் மய்யம் தந்தது - கலைஞர்
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது - கலைஞர்
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது - கலைஞர்
52.  கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது  - கலைஞர்
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது - கலைஞர்
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவியது - கலைஞர்
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவியது  - கலைஞர்
56. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி நிறுவியது  - கலைஞர்
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் - கலைஞர்
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தது - கலைஞர்
59. உள்ளாட்சி பதவிகளில் 33 விழுக்காடு பெண் களுக்கு இட ஒதுக்கீடு -  கலைஞர்
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வரச் செய்தது - கலைஞர்
61. மெட்ராசை, சென்னையாக்கியது - கலைஞர்
62.  முதல் தடவை வாழ்க்கைத் துணை இழந்த பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் அளித்தது - கலைஞர்
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது - கலைஞர்
64. முதல் தடவை வாழ்க்கைத் துணை இழந்த பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் - கலைஞர்
65. கான்கிரீட் சாலை அமைத்தது - கலைஞர்
66. தொழில்முறை கல்வியில் கிராமப்புற மாணவர் களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு செய்தது - கலைஞர்
67.  அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது - கலைஞர்
68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது - கலைஞர்
69. செம்மொழி மாநாடு நடத்தியது - கலைஞர்
70.  சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது - கலைஞர்
71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்ட ணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் - கலைஞர்
72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் - கலைஞர். (2006-2011 வரை அய்ந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)
73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள் (வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற் கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர்  -கலைஞர்.
74. விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு, சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)
75. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர்  - கலைஞர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...