Tuesday, April 3, 2018

கங்கை என்னும் சாக்கடை!

கங்கை நதியைப்பற்றி இந்துமதத் தலைவர்கள், அபிமானிகள் கட்டி விடும் கதைகளுக்கோ பஞ்சமில்லை; கங்கையில் குளித்தால் சகல பாவங்களும் பறந்தோடி விடும் - புண்ணியம் மூட்டை மூட்டையாக வந்த சேரும் என்றெல்லாம்  மூட்டை மூட்டையாகப் பொய்களை அவிழ்த்துக் கொட்டுவார்கள்.
செத்த பிறகுகூட அஸ்தியைக் கங்கையில் கரைத்தால் செத்தவன் மோட்சத்துக்குப் போவான் என்ற புரையோடும் மூட நம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை.
ஆனால் உண்மை என்ன? கங்கையைப்பற்றி மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வின் அடிப் படையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரிய தாகும். 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு என்ன கூறுகிறது?
"கடந்த ஆண்டு ஆய்வின்படி உத்தரப் பிரதேசத்தில் 16 குளியல் இடங்களில் கழிவு நீர் கலப்பது 50 சதவீதத்தையும் தாண்டி விட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அனுமதிக்கப்படும் அளவைக் காட்டிலும் அதிகம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் 88 சதவீத குளியல் இடங்களில் கங்கை நதி நீர் தூய்மையாக இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2050 ஆம் ஆண்டில் இந்திய நதிகளில் நீர் மாசுபாடு மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் உடல்நலத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனறும் யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 கங்கை நதி நீர் மாசுபடுவதை தடுக்க நிர்மாணிக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் போதுமானதாக இல்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கான்பூர், அலகாபாத், வாரணாசி ஆகிய இடங்களிலும் கங்கை நீர் அதிக அளவில் மாசு அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வாரணாசியில் உள்ள மல்வியாபலம் நதி நீரும் மாசு அடைந்துள்ளது. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் வழியாக கங்கை நதி பாய்கிறது. பீகாரில் அபிஷ் மால் என்ற இடத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் கங்கை நதியில் நுண்ணுயிர்க் கிருமிகள் அடங்கிய கழிவு நீர்அதிகம் கலப்பதால் இந்த இடங்களில் கங்கை நதி நீர் மிகவும் மாசு அடைந்துள்ளது. 
மேற்கு வங்காளத்தை பொறுத்த வரையில் 2016ஆய்வின்படி கழிவு நீர் நுண்ணுயிர்க் கிருமிகள் கங்கை நதியில் அதிகம் கலந்திருப்பது கண்டு அறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பெரும்பாலான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் எந்த அளவிற்கு தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது என்ற புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை."
- இவ்வாறு அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.
கங்கை என்ற சாக்கடையைத் தூய்மைப்படுத்த 187 திட்டங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எவ்வளவுப் பொறுப்பற்ற மூடத்தனம்!
மக்கள் நல அரசாக இருந்தால் என்ன செய்ய வேண்டும், மத்திய - மாநில அரசுகள் கங்கையில் குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தடை செய்ய வேண்டாமா? ஆனால் மத்தியில் உள்ள இந்துத்துவா பிஜேபி ஆட்சி கங்கையைச் சுத்திகரிப்பதாகக் கூறிக்  கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் கொட்டியழப்படுகிறது. கண்மூடித்தனமான ஒரு வேலையில் ஈடுபட்டு வருகிறது.
கங்கையில் குளிப்பது உடல் நலத்துக்கு உகந்ததல்ல என்று ஒரு பக்கம் மத்திய அரசின் ஒரு துறையான மாசு கட்டுப்பாடு வாரியம் அறி விக்கிறது. ஆனால் மத்திய அரசின் நிதித்துறையோ அதற்கு மாறாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் பாழாக்குகிறது. ஏனிந்த இரட்டை வேடம்?
நடப்பது மக்கள் நல அரசல்ல - மனுதர்ம அரசே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...