Saturday, December 10, 2016

ஊளையிட்ட நரிகள் எங்கே பதுங்கின?

5.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் விற்பனையை இலக்காக வைத்த மோடி அரசுக்கு கிடைத்தது 65,789 கோடிதான். இதன்மூலம் அரசுக்கு மூன்றேமுக்கால் லட்சம்  கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2ஜி வாதத்தின்படி 1,80,000 கோடி இழப்பு, ஊழல் என்றால் 3,75,000 கோடிகள் இழப்பும் ஊழல்தானே?
2016-17 ஆம் ஆண்டிற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் பல்வேறு மூடநம்பிக்கைகளின் காரணமாக அரசே தேதியைத் தள்ளிப்போட்டு வந்தது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி விஜய தசமியன்று விஜய முகூர்த்த்தில் துவங்கப்பட்டது.
1,800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை அலைகற்றைக் கான அடிப்படை ஏலத் தொகை ரூ.2,873 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 900 மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,341 கோடியாகவும், 800 மெகாஹெர்ட்சுக்கு ரூ.5,819 கோடியாகவும், 2,00 மெகாஹெர்ட்சுக்கு ரூ.2,100 கோடி யாகவும், 700 மெகாஹெர்ட்சுக்கு ரூ.11,485 கோடியாகவும், 2,300 மெகாஹெர்ட்சு மற்றும் 2,500 மெகாஹெர்ட்சு அலைவரிசை அலைக்கற்றைக்கு தலா ரூ.817 கோடி யாகவும் அடிப்படை ஏலத் தொகை நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. மொத்தம் 2354.55 மெகா ஹெர்ட்சு செல்போன் அலைவரிசைகள் அனைத்து அலைவெண் பட்டைகளிலும் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில்  ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், அய்டியா செல்லுலர் மற்றும் பார்தி ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்களும் அலைக்கற்றை ஏலத் துக்கான போட்டியில் கலந்து கொண்டன.
இந்த ஏலத்தின் மூலமாக, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெருந்தொகையாக 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவோம் என்று கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அருண் ஜெட்லி அறிவித்தார். மோடியும் தனது பொதுக்கூட்டங்களில் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கோடிகளை அரசு லாபமாகப் பெறும் என்று கூறிக்கொண்டு இருந்தார்.
ஆனால், மத்திய அரசு நிர்ணயித்த தொகையில் ஏலம் எடுக்க, எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதனால் தொடர்ந்து ஏலத் தொகையைக் குறைத்து ஏலம் விடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
மத்திய அரசுக்கு, வெறும் 67 ஆயிரம் கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது;  இது மிகபெரும் இழப்பாகும்.  அரசு நிர்ணயித்த இலக்கைவிட பல மடங்கு குறைவாக விலைக்குப் போனது. இதனால் அரசுக்கும் 3,75,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. யுபிஏ அரசின் காலத்திலும் இதே போன்ற இழப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த இழப்பை ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று பெயர் சூட்டிய அப்போது எதிர்கட்சியாக இருந்த இதே பாஜக தற்போது ஆளும் கட்சியாக உள்ளது, இம்முறை ஏற்பட்ட  இழப்பும் ஊழலாகவே கருதப்படுமா?
மத்திய அரசுக்குக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பு குறித்து கருத்து தெரிவித்த தொலைத்தொடர்பு துறை செயலாளர் ஜே.எஸ்.மிஸ்ரா கூறியதாவது, “மத்திய அரசு மிகப் பெரிய அளவில் மிகச் சிறந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்பனை செய்கிறது. அதனால் விலை அதிகமாக நிர்ணயிக்கவேண்டியுள்ளது. ஏலம் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில்  அனைத்து நிறுவனங்களும் கலந்து கொண்டன’’ என்று கூறினார். “இருப்பினும் நாங்கள் திட்டமிட்டபடி வருவாய் இலக்கை அடையமுடியவில்லை;மிகப்பெரிய அளவில் தற்போதுதான் அலைவரிசை ஏலம் விடப்படுகிறது. இந்த அலைவரிசை மூலம் தொலைத் தொடர்பு சேவை மேம்படுவதுடன், தொலைத் தொடர்பு சேவை இடை இடையே பாதிக்கும் பிரச்சினைகளும் இருக்காது’’ என்றும் கூறினார்.
ஏலத் தொகை பற்றி அய்டியா செல்லுலார் நிறு வனத்தின் நிதி ஆலோசகர் அக்ஷயா முந்திரா கருத்து தெரிவித்தபோது “ஏலத்தொகை மிகவும் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் ஏலம் கேட்க உரிமை கோரிய நிறுவனங்கள் மீண்டும் தங்களது பொருளாதார ஆலோசனைக்குழுவைக் கூட்டி முடிவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் ஏலத்திலிருந்து விலக நேரிடும் சூழல் உருவாகிறது. ஏலத்தொகையை உயர்த்தியதன் மூலம் சில நிறுவனங்கள் லாபம் பெறும்; அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை எட்ட முடியாது’’ என்று கூறினார்.
அரசுக்கு ஏற்பட்ட இந்தப் பெரிய அளவிலான இழப்பு குறித்து தொலைத்தொடர்புத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்தாவது, “மத்திய அரசு ஆரம்பத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டது, பொதுவாக ஏலத்தொகை அதிகம் நிர்ணயிக்கும்போது பல்வேறு நிறுவனங்கள் துவக்கக் கட்ட ஏலத்திலேயே வெளியேறிவிடுகின்றன. இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி அரசு தனக்குசாதகமான நிறுவனத்திற்கு ஏலம் கொடுத்து விடுகிறது’’ என்று தெரிவித்தனர்.
பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இலட்சியமெல்லாம் தனியார் தொப் பையை வளர்ப்பதே!
2ஜி ஊழல் என்று ஊளையிட்ட நரிகள் இப்பொழுது எங்கே பதுங்கினவாம்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...