Saturday, June 18, 2016

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த மதக் கலவரம் மோடி பொறுப்பு ஏற்பாரா?

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த மதக் கலவரம்
69 முஸ்லீம்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு!
11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
12 பேருக்கு 7 ஆண்டுகள், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
மோடி பொறுப்பு ஏற்பாரா? நாடே எதிர்பார்க்கிறது?
அகமதாபாத் ஜூன் 17 நரேந்திர மோடி குஜராத்தில் முதல் அமைச் சராகவிருந்தபோது சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலையில் குற்றவாளிகள் 11 பேர்களுக்கு ஆயுள் தண்டனை - (சாகும் வரை) விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மோடி முதல்வராக இருந்த போது குஜராத் மாநிலம் முழு வதும் 2002ஆம் ஆண்டு மதக் கலவரம் நடைபெற்றது.

இந்தக் கலவரத்தில் ஈடு பட்ட காவிக்கும்பல் அகமதா பாத் நகரத்தில் மய்யப்பகுதி யான குல்பர்க் சொசைட்டியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட இஸ்லா மியர்கள் அடைக்கலம் புகுந்தி ருந்தனர். இந்த குடியிருப்பில் நுழைந்த பஜ்ரங்க்தள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் எனப் பார்க்கா மல் அனைவரையும் வெட்டிச் சாய்த்தனர். வெட்டுப்பட்ட நிலையில் இருந்தவர்களை ஒன்றாக இழுத்துப் போட்டு அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி டயர்களைப் போட்டு தீவைத்துக் கொளுத்தினர். இதில்  69 மரணமடைந்தனர் 27 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

14 ஆண்டுகளாக நடந்து வந்த  இந்த வழக்கில்  24 பேர் குற்றவாளிகள் என்றும் 36 பேரை விடுதலை செய்தும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் ஜூன் 2 ஆம் தேதி தீர்ப்பளித் தது. முதலில் இவ்வழக்கில் தண்டனை விவரம் 6-ஆம் தேதி அறிவிக்கப்படுவதாக இருந் தது. ஆனால், தண்டனை விவ ரத்தை 9-ஆம் தேதி, 11-ஆம் தேதி, 13ஆ-ம் தேதி என மூன்று முறையும் அறிவிக்காமல்  ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு 4-ஆவது முறையாக ஜூன் 17-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன் படி இன்று அளிக்கப் பட்ட தீர்ப்பில்  படுகொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில்  11 பேருக்கு ஆயுள் தண்டனை யும், 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவ ருக்கு 10 ஆண்டு சிறைத் தண் டனையும் விதித்தும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் சாகும் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண் டும் எனவும் நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

மரண தண்டனை இல்லை

குற்றவாளிகள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 69 பேரை உயிருடன் எரித்துக் கொன்று கொடுஞ்செயல் புரிந்துள்ள தால், அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகள் 11 பேர் உட்பட யாருக்குமே மரண தண்டனை வழங்கப்படவில்லை.

இந்தத் தீர்ப்பு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தும் என்பதில் அய்யமில்லை. அன்றுமுதல் அமைச்சராகவி ருந்த நரேந்திர மோடி பொறுப் பேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2002ஆம் ஆண்டு பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ரயிலின் எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்தப் பெட்டியில் இருந்த அயோத்திலிருந்து வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவ கர்கள் 59 பேர்  உடல் கருகி மாண்டனர். இதையடுத்து குஜ ராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லீம் சமுதாயத் தினரை குறி வைத்து வேட்டை யாடினர் சங் பரிவார் அமைப் பினர். மிகக் கொடூரமான  முறையில் முசுலீம்கள் கொல் லப்பட்டனர்! இந்த கலவரத் தில் சிக்கி 2000 பேர் பலியா னார்கள். கலவரத்தில் 254 இந்துக்களும் பலியானார்கள். பிப்ரவரி 28ஆம் தேதி 2000 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' பகுதி யில் வசித்த முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதோடு, அடித் தும் படுகொலை செய்யப்பட் டனர்.

முதலமைச்சர் நரேந்திர மோடியின் தூண்டுதல்

இந்த சம்பவத்தில் 69 பேர் உயிரிழந்தனர். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப் ரியும் கொல்லப்பட்டார். கல வரம் நடந்த போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலைகள் நடந்தன என ஈசன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் சி.பி.அய் முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசா ரணைக் குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புல னாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் களுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து மோடியும் அவ ரது அமைச்சரவை சகாக்களும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இதை ஜாகியா ஏற்றுக் கொள்ள வில்லை; விசாரணை முறை யாக நடக்கவில்லை என்று கூறி மீண்டும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். முதலில் இந்த வழக்கை விசாரித்த, அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண் டும் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஜாப்ரிக்கு அனுமதி தந்தது. இந்த மனுவை விசா ரித்த அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏது மில்லை என உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

இந்த நிலையில் குல்பர்க் சொசைட்டி வழக்கு  உச்சநீதி மன்றம் கண்காணிப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 8 மாதங்களுக்கு முன் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், மே 31ஆம் தேதி தீர்ப்பு வழங்கும்படி சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன் றம் அறிவுறுத்தி இருந்தது.


.
 1

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...