Friday, October 2, 2015

ஒட்டு மொத்த தமிழர்களுக்கு ஏமாற்றம்! அதிர்ச்சி!!

அய்.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கைக்கு சாதகமான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றம்
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாம்!
ஒட்டு மொத்த தமிழர்களுக்கு ஏமாற்றம்! அதிர்ச்சி!!
ஜெனீவா, அக்.2- போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் பங்களிப்பு இல்லாத பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஓட்டு மொத்த தமிழர் களும் - வற்புறுத்தி வந்த நிலையில், இலங்கை அரசுக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மா னம் அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேறி இருப்பதும், இந்திய உள்ளிட்ட நாடுகள் அதற்கு ஆதரவு நிலை எடுத் திருப்பதும் பெரும் ஏமாற் றத்தையும், அதிர்ச்சியை யும் ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட் டனர்.போரின் போது மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் நடைபெற்ற தால், அதுகுறித்து சர்வ தேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வற் புறுத்தின. ஆனால் அதை ஏற்க மறுத்த இலங்கை, தாங்களே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க விரும்புவதாக கூறியது.
இதற்கிடையே, இலங் கையில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்திய அய்.நா. மனித உரிமை ஆணையர் சையத் ராத் அல் உசேன், போர்க் குற்றங்கள் பற்றி சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண் டும் என்று கோரி ஜெனீவா நகரில் உள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத் தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் இந்த அறிக்கை தங்கள் நாட் டின் இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி இலங்கை எதிர்ப்பு தெரி வித்தது.
இந்த நிலையில், இலங் கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா வின் சார்பில், 47 நாடு களை உறுப்பினர்களாக கொண்ட அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நேற்று (1.10.2015) ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்ட நிபு ணர்கள், உள்நாட்டு நீதி பதிகள் அடங்கிய விசா ரணை குழு ஒன்றை இலங்கை அமைத்து போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்த வேண் டும் என்று கூறப்பட்டு இருந்தது. குற்றங்கள் செய்தவர்கள் தண்டிக்கப் படுவதை இலங்கை அனு மதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இலங்கைக்கு சாதக மான இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத் தில் கலந்து கொண்டு பேசிய இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள் ளிட்ட பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர் கள், தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.
தீர்மானத்துக்கு இந்தியாவும் தனது முழு ஆதரவை தெரிவித்தது. இந்திய பிரதிநிதி அஜித் குமார் பேசுகையில்: ஒருங்கிணைந்த இலங்கையில் அனைத்து தரப்பு மக்களும் சம உரிமையுடன் தரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்தியா விரும்புவ தாகவும், 13ஆவது அரசி யல் சாசன திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண் டும் என்றும் கூறினார். இலங்கை அரசு மறுகட்ட மைப்பு வசதிகளை ஏற் படுத்தி தரவேண்டும் என் றும் அவர் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.
இலங்கை அரசின் பிரதிநிதி பேசுகையில், அமெரிக்க தீர்மானத்தின் படி செயல்பட இலங்கை தயாராக இருப்பதாக கூறினார்.  இந்த தீர்மா னத்தின் மீது எந்த நாட் டின் பிரதிநிதியும் வாக் கெடுப்பு கோரவில்லை. இதனால், இலங்கைக்கு ஆதரவான அமெரிக்கா வின் தீர்மானம் ஓட்டெ டுப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பெரும் ஏமாற்றம் - அதிர்ச்சி
போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கையின் பங் களிப்பு இல்லாத சர்வ தேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழர் களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் வற்புறுத்தி வரும் நிலையில், இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான அமெரிக்கா வின் தீர்மானம் அய்.நா. மனித உரிமை ஆணையத் தில் ஒருமனதாக நிறை வேறி இருப்பது, அவர் களுக்கு பெரும் ஏமாற் றத்தையும், அதிர்ச்சியை யும் ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயம் இலங்கை யில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை வரவேற்று இருக்கிறது. முன்னதாக மனித உரிமை ஆணையர் சையத் ராத் அல் உசே னின் அறிக்கை மீது ஆணைய கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது சையத் ராத் அல் உசேன் பேசுகையில்: இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எந்த நிவார ணமும் கிடைக்கவில்லை என்றும், முந்தைய ராஜ பக்சே அரசு அளித்த வாக் குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்றும் கூறினார்.
விவாதத்தில் பங் கேற்று பேசிய இலங்கை தூதர் ரவிநாத ஆர்ய சின்கா, அனைத்து மக் களின் உரிமைகளையும் பாதுகாக்க அய்.நா.வுடன் இணைந்து இலங்கை செயல்படும் என்றும், இதற்காக சர்வதேச சமூ கத்தின் உதவிகளும், ஆலோ சனைகளும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.
கூட்டத்தில் பேசிய அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ரஷ்யா, கனடா உள்ளிட்ட பல் வேறு நாடுகளின் பிரதி நிதிகள் இலங்கை அரசின் நிலைப்பாட்டை ஆதரிப் பதாக தெரிவித்தனர்.
பிரான்சு, சுவிட்சர் லாந்து நாடுகளின் பிரதி நிதிகள் பேசுகையில், சர்வ தேச ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த விவாதத்தில் இந் தியா பங்கேற்கவில்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...