Tuesday, September 22, 2015

பிஜேபியின் சாணிப் புத்தி


மத்தியிலும், சில மாநிலங்களிலும் பிஜேபி ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் போதும் மக்கள்                     அனுபவிக்குதுயரங்களும் போதும் - போதும் என்கிற நிலைக்குக் கீழிறக்கத்திற்கு வேக வேகமாகச சென்று கொண்டு இருக்கிறது.
மாட்டுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்றார்கள் - அதனைத் தொடர்ந்து இப்பொழுது அரசு மருத்துவ மனைகளில் கிருமிகளைக் கொல்லுவதற்கு (Disinfectant) கிருமி நாசினியாக இதுவரை விஞ்ஞான ரீதியாகப் பயன்படுத்தி வந்த பினைல் டெட்டால் போன்ற மருந்து களுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தை (அதில்கூட பசு மூத்திரத்தை) பயன்படுத்த வேண்டும் என்று ராஜஸ் தானில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜேபி அரசு சுற்றறிக்கை விட்டுள்ளது என்பது மிகப் பெரிய அதிர்ச் சியான செய்தியாகும். முதற்கட்டமாக ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப் படுமாம்.
எதில் பரிசோதனை? நோய் வாய்ப்பட்ட மக்களின் உயிரோடு விளையாடிப் பார்க்க விரும்புகிறார்களா? இது ஒரு வகையான விஷப் பரிட்சை Acid Test)
அல்லவா!
இந்த மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்திய காரணத் தால் நோயாளிகள் தொற்றுநோய்க்கு ஆளாகி மரணிக்க நேர்ந்தால் அதற்கான பொறுப்பினை ராஜஸ்தான் அரசு ஏற்றுக் கொள்ளுமா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் போன உயிரைத் திருப்பிக் கொடுப்பார்களா?
அரசாங்கங்கள் ஒன்றைத் தயாராக வைத்துக் கொண்டிருக்கின்றன. எதற்கெடுத்தாலும் இழப்பீடு என்பதுதான் அந்தக் கை வந்தகலை!
எதையும் விலை பேசி விடலாம் என்பது எவ் வளவுக் கேவலமானது மனித உயிரைத் துச்சமாகக் கருதக் கூடியது.
1870ஆம் ஆண்டிலே என்ன நடந்தது? இந்தியக் கிராமங்களில் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சுவாசம் தொடர்பான கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவதற்குக் காரணமே வீடுகளில் தெளிக்கப்படும் சாணமும், மாட்டு மூத்திரமும்தான் என்று அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டு, மாட்டுச் சாணத்தையும், மாட்டு மூத்திரத்தையும் தவிர்க்குமாறு ஆங்கில அரசு விளம்பரங்கள் மூலமாகவே நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
பிஜேபி ஆளும் ராஜஸ்தான் அரசு மேற்கொள்ள விருக்கும் இந்த அஞ்ஞான நடவடிக்கையில் மருத் துவத் துறை உடனடியாக தலையிட்டாக வேண்டும்; ஏனெனில் இது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை உயிர்ப் பிரச்சினை.
இவர்கள் மேற்கொள்ளும் இந்த முறையை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அது வரை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளில் மாட்டு மூத்திரத்தைத் தெளிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
பிஜேபியின் அபிமான சாமியாரான ராம்தேவ் என்பவர் ஒரு மருந்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்தார். அவர் உற்பத்தி செய்யும் அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இது விஞ்ஞானப் பூர்வமான வகையில் ஏற்றுக் கொள்ளப் படக் கூடிய ஒன்றா?
செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருக்கிறது. பனி உறைந்த நிலை காணப்படுகிறது - எனவே மனிதர்கள் வசிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது - நிலா உலகில் வாழலாம் என்கிற அளவுக்கு அறிவியல் உச்ச நிலை யில் உலா வரும் கால கட்டத்தில் இப்பொழுது போய், மாட்டுச் சாணி, மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துங்கள் என்று சொல்லுவது - மனிதன் இன்னும் காட்டு விலங் காண்டிக் காலத்தில் சஞ்சரிக்க ஆசைப்படுவதாகத்தான் பொருள்படும்.
பக்ரா நங்கல் அணை கட்டப்பட்டு, அதற்கான திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் - இவைதாம் நமது உண்மையான கோவில்கள் மற்றவையல்ல  - நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறியதோடு அவர் நிற்கவில்லை We are not living in the Cow Dung Age
(நாம் சாணியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வில்லை என்று) - நம்மிடையே நிலவும் மூடநம்பிக்கைப் புத்தியையும் ஒரு தட்டுத் தட்டி விட்டார்.
நேரு போன்ற பிரதமர் இருந்த இடத்தில் தான் மாட்டு மூத்திரப் புத்தியோடு ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்களும் இருக்கிறார்களே, என்ன சொல்ல!
இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) ) பிரிவு மக்களிடையே விஞ்ஞான மனப் பான்மையை வளர்ப்பது- ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று வலியுறுத்துகிறது. ஆனால் பிஜேபி ஆட் சியாளரோ மாட்டு மூத்திரத்திலும் மாட்டுச் சாணியிலும் விஞ்ஞானத்தைத் தேடிக் கொண்டு திரிகிறார்கள்.
பொதுவாக இந்துத்துவாவாதிகள் என்பவர்கள் பழைமை விரும்பிகள்தான் முற்போக்கான பாதையில் அவர்களின் சிந்தனைகள் பயணிக்காது.
மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் என்று மாட்டிலிருந்து கிடைக்கும் அய்ந்து பொருள் களையும் ஒரு கலக்குக் கலக்கி அதற்குப் பஞ்சகவ்யம் என்ற நாமகரணமும் சூட்டி, பக்தி நோயால் பாதிக்கப் பட்ட மக்களை பார்ப்பனப் புரோகிதர்கள் குடிக்கச் செய் வதில்லையா! அப்படிக் குடிப்பவர்களிடம் தட்சிணை யையும் கணிசமான அளவுக்குக் கறந்து கொள்வ தில்லையா!
விவேகானந்தர் ஒரு முறை இந்துத்துவாவாதி களைப் பார்த்துக் கூறியதுபோல பசுவைத் தாயாகக் கொண்டவர்களுக்கு அந்த மாட்டுப் புத்தி தானே இருக்கும்?
மக்களிடம் பகுத்தறிவுச் சிந்தனை இல்லை என்றால் மிகப் பெரிய ஆபத்துதான் - வீண் சங்கடங்கள் தான்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...