Friday, September 25, 2015

தந்தை பெரியாரின் பகுத்தறிவு வெளிச்சம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது

புதுக்கோட்டை, செப். 22_ புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கழக மாவட்டம் நாகுடியில் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு நடந்தது. இம்மாநாட்டிற்கு புதுக்கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். கழகத்தின் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன், மண்டலச் செயலாளர் சு.தேன் மொழி, 
புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறி வொளி, செயலாளர் ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட் டச் செயலாளர் இளங்கோ, மாவட்ட அமைப்பா ளர்கள் தங்கராசு, ஆ.சுப்பையா, அறந்தாங்கி நகரத் தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியத் தலைவர் சவுந்தரராசன், நாகுடி அமைப்பாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கம்,  மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் சிவசாமி, மண்டல இளைஞரணிச் செயலாளர் அ.சர வணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சவு.ஞானாம்பாள் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். திமுகவின் சொத்து பாது காப்புக்குழுத் தலைவர் அறந்தை இரா.இராசன் மாநாட்டைத் திறந்து வைத்தார்.
தலைமைக் கழகப் பேச்சாளர்கள் இராம.அன்ப ழகன், மாங்காடு மணியரசன் ஆகியோர் துவக்கவுரை ஆற்றினார்கள். மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியை சோம. நீலகண்டன் நிகழ்த்தினார். திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் கே.பி.கே.தங்கவேலு அறந்தாங்கி சேர்மன் சிவ.வீ.மெய்யநாதன் முன்னாள் சேர்மன் பழ.சுப்பையா, 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் தெ.கலைமுரசு, தி.க. பொதுக்குழு உறுப்பினர் கு.கண்ணுச்சாமி மாவட்ட இளைஞரணித் தலைவர் ப.மகாராசா, மாவட்ட துணைத் தலைவர் க.முத்து, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வீரையா, பட்டுக்கோட் அமைப்பாளர் வை.சிதம்பரம், மருத்துவர் மதியழகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநாட்டைத் திறந்து வைத்து சிறப்பு ரையாற்றிய அறந்தை ராசன் பேசுகையில்... இப்பகுதி ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த பகுதியாகும். 
எங்கள் குடும்பம் பெரியதாகும். வருடம் முழுவதும் 12 -மாதங்களிலும் ஏதாவது திதி திவசம் என்று வந்து கொண்டேயிருக்கும். அதனால் என் கையால் பார்ப்பனர்களுக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டேயிருப்போம். இதெல்லாம் நான் திராவிடர் கழகத்தில் சேர்வதற்கு முன்புதான்.
பட்டுக்கோட்டை அழகிரி போன்றவர்ரகளிடம் பகுத்தறிவுக் கருத்துகளைக் கேட்டறிந்த பின்பும் அய்யா தந்தை பெரியார் அவர்களின் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு முழுமையான பகுத்தறிவுவாதியாக மாறிவிட்டேன். இப்போது எங்கள் குடும்பம் மட்டுமல்ல எங்கள் ஊரே மாறி விட்டது. அனைத்து சாதியில் உள்ளவர்களும் எங்கள் ஊரில் இருந்தபோதிலும் அந்தந்த சாதிக்குள் மட்டும் தான் சொந்த பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறி அனைத்து சாதியிலும் அனைத் துச் சாதியைச் சேரந்தவர்களும் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வாழ்க்கை முறையை சமூக முறையை ஏற்படுத்தி உள்ளனர். இது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் என்றார்.
தமிழர் தலைவர் அய்யா அவர்கள் சிறப்புரையாற் றிய போது தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த கண்டு பிடிப்பான பல்பு இன்று உலகம் முழுவதும் உபயோகப் படுத்தப் படுகின்றன. அவரது கண்டு பிடிப்பு உலகை ஒளிமயமாக்கி வைத்திருக்கிறது. அதே போல் தமிழ கத்தில் பிறந்து பகுத்தறிவு வெளிச்சத்தைக் கொடுத் தவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள். அந்த பகுத்தறிவு வெளிச்சம் உலகம் முழுவதும் பரவி யிருக்கிறது. இயல்பாக நடந்ததுதான் என்றாலும் பல்பு கண்டு பிடித்ததும் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த தும் 1879-ஆம் ஆண்டு ஆகும். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வியக்கத் தக்கது.
உடல் உறுப்புகளில் அனைத்தும் சரியாக வேலை செய்ய வேண்டும். கண்கள் என்றால் இரண்டும் சரிசம மாக வேலை செய்ய வேண்டும். காதுகள் என்றாலும் அப்படித்தான். அதே போல் ஒவ்வொரு உறுப்புகளும் சரிசமமாக இருந்தால்தான் உடல் சரியாக இயங்கும். அதேதான் சமூகமும். ஆண்கள் உயர்வாகவும் பெண்கள் தாழ்ந்தும் இருக்கக் கூடாது. கல்வியிலும் சமூகத்திலும் ஆண்களுக்கு இணையான  பெண்கள் நிலை உயர்ந்திருக்க வேண்டும். அதைச் செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
பாரப்பனக் குடும்பத்திற்குக்கூட தந்தை பெரியாரின் கொள்கையும் போராட்டமும்தான் விடுதலை பெற்றுத் தந்திருக்கிறது. முன்பெல்லாம் பார்த்தால் பார்ப்பனக் குடும்பங்களில் மொட்டைப் பாப்பாத்தி என்று சொல்லி ஒதுக்கி வைத்திருப்பார்கள். அவர்கள் வெள்ளைச் சேலை உடுத்தியிருப்பார்கள். இப்போது அப்படி எல்லாம் அவர்கள் இல்லை. மாறிவிட்டார் கள். அவர்களின் இந்த மாற்றத்திற்குக் காரணம் பெண் கள் இப்படி இருக்கக் கூடாது என்று கூறிய அய்யா அவர்களின் கொள்கைதான்.
பாஜகவின் கொள்கை முடிவின்படி கடந்த டிச. 7-ம் தேதி அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை எடுத்து விட்டு மனுதர்மச் சட்டங்களைக் கொண்டுவர வேண் டும் என்கிறார்கள். அப்படிக் கொண்டு வந்தால் நாம் மீண்டும் பழைய காலத்திற்குச் செல்ல நேரிடும். பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்று பல்வேறு கருத்துகளை எடுத்தக் கூறினார். அறந்தை மாவட்ட ப.க. தலைவர் செ.அ.தர்மசேகர் நன்றி கூறினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...