Monday, July 6, 2015

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழுப் பொறுப்பேற்க திரைக் கலைஞர் பல்லவி மறுப்பு

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழுப் பொறுப்பேற்க
திரைக் கலைஞர்  பல்லவி மறுப்பு
மேலும் சிலரும் பதவி விலகல்

பூனா, ஜூலை6_ பூனாவில் உள்ள திரைப் படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத் தின் தலைவராக சவ்கான் என்னும் சிறிய நடிகர் ஒருவரை மத்திய பாஜக அரசு நியமனம் செய்த தால், அக்கல்வி நிறுவனத் தின் மாணவர்கள் தொடர்ச் சியாக கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். சென்னை அய்.அய்.டி. மாணவர் அமைப்பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், டில்லி யில் உள்ள அரசு நிறுவ னமாக உள்ள ஜவகர் லால்நேரு பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல் வேறு இடங்களிலிருந்தும் அம்மாணவர்களுக்கு ஆதரவாக, மத்திய அர சின் முடிவை எதிர்த்து எதிர்ப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது.
நடிகை பல்லவி ஜோஷ் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச் சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடி தத்தில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பொறுப்பு வகிக்க விரும்ப வில்லை என்று குறிப் பிட்டுள்ளார்.
தொலைக்காட்சிகளில் அந்தாக்ஷரி எனும் போட்டிப்பாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த வரான பல்லவி ஜோஷ், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஏற்பட் டுள்ள பல்வேறு சம்பவங் களைச் சுட்டிக்காட்டி, அந்த காரணத்தாலேயே பொறுப்பை வகிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத் தயாரிப் பாளர் ஜானு பரூவா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோரும் பயிற்சி நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழுவில் அல்லது அதன்சாபுடைய எந்த அமைப்பிலும் அங்கம் வகிக்க விரும்ப வில்லை என்று அறிவித் துள்ளனர்.
பல்லவி கூறுகையில், பூனாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ஆட்சிமன்றக்குழு உறுப் பினராக என்னுடைய நியமனம்  மாணவர்களி டையே என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப் பாகும் என்று எதிர் பார்த்தேன்.  ஆனால், கல்வி நிறுவனத்தின் அமைப்பு, ஆட்சிமன்றக் குழுகுறித்து மாணவர்கள் மகிழ்வாக, திருப்தியாக இல்லை என்றால், அத னால் ஏற்படப்போகின்ற பயன்தான் என்ன? என்று கேட்டார்.
3 நாட்களுக்கு முன் பாக மத்திய அமைச்சகத் துக்கு தன்னுடைய கருத்தை கடிதம்மூலமாகத் தெரிவித்துவிட்டதாக பல்லவி குறிப்பிட்டுள்ளார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...