Thursday, January 22, 2015

தினம் ஒரு நெல்லிக்(கனி)காய்

 



தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல் வார்கள். இன்றைய விலைவாசியில் மருத்துவரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும்.

ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக் கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்'' என்கிறார் சென்னை அரசு அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவரான கே.வீரபாபு. ''நெல்லிக்காயில் சிறப்பு என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது.

நெல்லிக்காயே சிறப்புதான்...'' என்கிறார் சரிநிகர் உணவு ஆலோசகர் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து...

1. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங் களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

3.கொதிக்கும்  வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் சளி பிடித்துக் கொள்ளும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் சளி வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங் களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.

5.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

6.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

இந்துத்துவவாதிகளுக்கு மரண அடி

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை மதவாதமே!

அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி!




புதுடில்லி, ஜன.27_ இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையாகவே இருக்கும் என்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

மாணவர்களிடையே அவர் தெரிவித்த கருத்து இந்துத்துவாவாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. டில்லியில் இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான இன்று (27.1.2015) பகல் 12 மணியளவில் சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடையே பேசும் போது அவர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா  பதில் அளிக்கையில் மத வாதப் பாதையில் செல்லும் எந்த நாடும் முன் னேற்றம் காணாது,  இந்தியாவின்  வளர்ச்சிக்கு தடையாக மக்களைப் பிளக்கும் கருவியாக மதவாதம் இருக்கும் என்று பதிலளித்தார்.

மதவாதம் என்பது மக்களைப் பிரிவி னைக்கு ஆளாக்கும் ஒரு கருவியாக தற்போது மாறிக்கொண்டு வருகிறது, மதவாதப் பாதை யில் இருந்து விலகி, சமூகநலனிற்கு பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் மதத் தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டு விட்டு வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால் இந்தியா வளர்ச்சியடையும்.

அமெரிக்காவில் 30 லட்சத்திற்கு மேல் இந்தியர்கள் வசிக்கின்றார்கள். அங்கு இந்தி யர்கள் மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களுடைய வளர்ச்சியுடன் அமெரிக்காவின் வளர்ச்சி குறித்தும் அக்கறைகொண்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்க மக்களிடையே பல இந்தியர்கள் நற்பெயர்களைப் பெற்றுள் ளனர்.

நமக்குள் ஏற்படும் விவாதங்களை அது எந்த தலைப்பில் இருந்தாலும் அமைதியான பேச்சுவார்த்தையின் துணையோடு தான் தீர்வு காண முடியும். ஆனால், உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் எந்த முடிவும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

இந்தியா எப்பொழுது வெற்றிப் பாதையில் செல்லும்?

இந்தியாவின் வளர்ச்சி  எப்போது வெற்றிகரமான பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு, மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத் தாமல் இருக்கும் பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும்; அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.

மதமாற்ற விவகாரம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்த ஒபாமா ஒருவர் ஒரு மதத்தைப் பின்பற்றுவதும், அதை விட்டு விலகுவதும் அவரவர் விருப்பமாகும், அது தனிப்பட்ட மனிதருக்கான அதிகாரமாகும், ஆனால் மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிரிவினைக்கு ஆட்படுத்தும் இதில்  மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அமெரிக்கா வளர்ச்சி அடைந்தது எப்பொழுது?  நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களது பெற்றோருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது, காரணம் நிறபேதம் அமெரிக் காவை ஆட்டிப்படைத்தது, தற்போது அப்பிரி வினைவாதம் நீங்கியதால் தான் அமெரிக்கா வின் வளர்ச்சி சாத்தியமானது. இந்தியாவின் உறுதியை மதப் பிணக்குகள் குலைத்து விடும். இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 25 இந்துத்துவா வலதுசாரி அமைப்புகளின் கர் வாப்சி என்கிற மதமாற்றங்களுக்கு எதி ராக ஒபாமா பேச்சு அமைந்திருந்தது.

ஒபாமா இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 25இன்படி மத சுதந்திரம் குறித்து கூறப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, உங்கள் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடு கிறது. அனைவருக்கும் தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாகப் பேசுவதற்கும், பின்பற்றுவதற் கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நம்முடைய இரண்டு நாடுகளிலும் அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்தைக்காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக் கும் உள்ளது.

உலகம் முழுவதும் மத சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளதைக் காண்கிறோம். வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றால் ஒரே நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளது. மதரீதியான பிரிவினைக்கு எதிராக காப்பாளராக நாம் இருக்க வேண்டும்.  என்று கருத்துரை வழங்கினார் அமெரிக்க அதிபர்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை மதவாதமே! அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி!


நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!




No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...