Saturday, December 20, 2014

பயிரையே மேய்ந்த பார்ப்பன நீதிபதி வேலிகள்!

நீதி கெட்டது யாரால்?
பயிரையே மேய்ந்த பார்ப்பன நீதிபதி வேலிகள்!

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தி


டில்லி, டிச.18- சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து உச்சநீதிமன்றத் தின் நீதிபதியாக பணி புரிந்து, ஓய்வு பெற்றவர், கொல்கத்தா பார்ப்பன நீதிபதி கோகலேயாவார்.

எப்போதும் நடை முறையில் இல்லாத நடை முறையாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி கடந்த திங்கள் அன்று (15.12.2014) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிபதி எச்.எல். கோகலே  பணி ஓய்வு பெறுவதற்கு முன்ன தாக ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கினார். விசாரணை நீதிமன்றம் பெற்றுத்தராத வாடகை உரிமையை நீதி பதி எச்.எல்.கோகலேவின் தீர்ப்பு அவர்  சகோதரிக்கு பெற்றுத்தந்தது.

பொதுவாக தீர்ப்புகளி லிருந்து சட்டரீதியான உரிமை கோரும் மனுவா கவே மறு ஆய்வு கோரும் மனுவை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்வதுதான் வழக்கமாக உள்ளது.

இவ்வழக்கில் மறு ஆய்வு விசாரணை மூடிய அறையில் இரு தரப்பு வழக்குரைஞர்கள் துணை இல்லாமல் நீதிபதிகளுக் குள்ளாக நடைபெற்றது.
நீதிபதி கோகலேவின் பணிக்காலத்தில் 11.2.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் அத்தீர்ப்பு வழங்கப்பட்ட காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுமாறு கோரி ஆயுள் காப்பீடு கழகத்தின் சார்பில் மறு ஆய்வு மனு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான மூவர் கொண்ட அமர்வு மறு ஆய்வு கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

எல்.அய்.சி.சார்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் விகாஸ் சிங் தீர்ப்புக்கு முன் உள்ள முழுமையான நிலையை விரிவாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கும்போது, விரிவாக வேண்டாம் என்று நீதிபதி கூறிய துடன், கேள்வியே சட் டத்தின்படி ஏற்புடை யதா? என்பதுதான். எல் அய்சி சார்பில் இவ்வழக் கில் எதிர் மனு தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றார்
11.2.2014 அன்று அளிக் கப்பட்ட தீர்ப்பில் இருந் துள்ள பின்னணிகுறித்து எல்அய்சி மனுவில் கூறி உள்ளது.

17.4.2000 அன்று எல்அய்சி எஸ்டேட் மேலாளருக்கு நீதிபதி கோகலே கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் மும்பை மாகிம் மன் மாலா டேங்க் சாலையில் உள்ள குட்வில் அஷ்யூ ரன்ஸ் பில்டிங் பகுதியில் உள்ள 41 மற்றும் 42 ஆகிய எண்ணுள்ள பிளாட்டுகளுக்கான வாடகை உரிமை குறித்த பிரச்சினையில் லக்ஷ்மண் தாமோதர் கோகலே (நீதிபதி கோகலேவின் தந்தை)யின் பெயரிலிருந்து அவர் சகோதரி பத்மஜா நீல்கந்த் தாம்ளே பெய ருக்கு மாற்றம் செய்யுமாறு அவர் கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார்.

அவர் தந்தையுடன் 20 ஆண்டுகளாக அவர் சகோதரி வசித்து வந்துள் ளார். ஆகவே, சட்டப்படி வாரிசு உரிமைப்படி வாடகை உரிமையை அவர் சகோதரிக்கு அளிப் பதில் அவர் உள்பட வேறு எவருக்கும் ஆட்சே பனை இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

2012 ஆம் ஆண்டில் பத்மஜா தாம்ளே மும்பை சிறுவழக்குகளுக்கான நீதிமன்றத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வாடகை உரி மையை அளிக்குமாறு மனு செய்தார். அம் மனுவை நிராகரிக்குமாறு எல்.அய்.சி. எதிர்மனு தாக்கல் செய்தது. பொது இடத்தில் கட்டப்பட்ட கட்டடம் குறித்த சட்டத் தின்படி சிறு வழக்குகளுக் கான நீதிமன்றம் விசா ரணை மேற்கொள்ள முடியாது என்றும், அந் நீதிமன்ற எல்லைக்குள் இல்லை என்றும் கூறி மனுவை ஏற்கவில்லை.

31.8.2013 அன்று பத்மஜா மனு நிராகரிக் கப்பட்டு, எல்அய்சி நிலைப்பாடு தக்கவைக்கப் பட்டது. இரண்டு வாரங் களுக்குப் பிறகு, 13.9.2013 அன்று நீதிபதி கோகலே தலைமையிலான உச்சநீதி மன்றத்தின் அமர்வு இதே வழக்கு போன்ற வழக்காக இருந்த சுகாஸ் போபலே என்பவரின் வழக்கின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்தது. பொது இடத் தில் வாடகைதாரராக இருப்பது என்பது பொது இடத்துக்கான சட்டத் திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பாம்பே வாட கைச் சட்டம் உரிமையை ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதிலிருந்து தடுக்கிறது.

27.9.2013 அன்று பத்மஜாவுக்கு எதிராக கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 11.2.2014 அன்று மனுத் தாக்கல் செய்திருந்தார். போபலே வழக்கில் நீதிபதி கோகலே தீர்ப்பை வழங்கினார். பொது இடங்களுக்கான சட்டம் வருவதற்கு முன்னதாகவே பொது இடத்தில் வாடகைதார ராக இருப்பவர்கள் இருக்கும் சொத்து பாம்பே வாடகைச் சட் டத்திற்குள் வந்துவிடுகிறது.

எல்.அய்.சி. அதன் மனுவில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்ட போது, (நீதிபதி கோக லேவால்) அமர்வு ஏராள மான அரசமைப்பு அமர்வின் தீர்ப்புகளைக் காட்டி இந்தப் பிரச் சினையைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஆனால், அவர் சகோதரியின் வழக்கு போன்றது அல்ல. அசோக் மார்கெட்டிங் [1990(4) ஷிசிசி406]  வழக்கில் இரண்டு வாடகை தாரர்கள் இருந்தனர். அரசமைப்பு அமர்வு மூலம் அறிவிக்கையின் மூலம் பொது இடங் களுக்கான சட்டம் நடை முறைக்கும் முன்பாகவே இருந்தும், வாடகைச் சட்டம் அவர்களைப் பாதுகாக்கவில்லை. என்று கூறப்பட்டுள்ளது.

பத்மஜா அவர் சகோதரர் 11.2.2014 அன்று அளித்த தீர்ப்பைக்காட்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 2.4.2014 அன்று அவருக்கு சாதக மான தீர்ப்பைப் பெற் றுக்கொண்டார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...